கந்தன் கருணை | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சிவகுமார் ஜெமினி கணேசன் சாவித்திரி கே. ஆர். விஜயா ஜெ. ஜெயலலிதா |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 1967 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் ஆகும்.