கரு இழப்பு (Embryo loss)(கரு மரணம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கருவின் வளர்ச்சியின் எந்த நிலையிலும் நிகழும் கருவின் மரணத்தினைக் குறிப்பாகும். இது மனிதர்களில், கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் எட்டாவது வாரத்திற்கு இடையில் நிகழ்வதாகும்.[1] கரு ஒன்றின் வளர்ச்சியில் ஏற்படும் தோல்வியானது பெரும்பாலும் கருப்பையில் அதன் திசுக்களின் சிதைவு மற்றும் ஒருங்கிணைப்பால் நிகழ்கிறது. கருவின் ஆரம்பக் கால வளர்ச்சியில் ஏற்படும் இழப்பினால் கருவானது கருசூழ் திசுக்களால் உறிஞ்சப்படும்.[2] கர்ப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கரு இழப்பு பெரும்பாலும் நிகழ்கிறது. பொதுவாகக் கருக்களில் 40 முதல் 60% வரை உயிர்வாழ்வதில்லை.[3]
மகப்பேறு மருந்தகங்களில் ஆய்வுக்கூட கருத்தரிப்பில், கரு இழப்பு அதிக எண்ணிக்கையில் பொருத்தப்பட்ட கருக்களுடன் தொடர்புடையதாக உள்ளது.[4] கருக்களை ஆய்வகங்கள் பாதுகாத்து வைத்திருப்பதில் ஏற்படும் தொழில்நுட்ப செயலிழப்புகளால் கரு இழப்பு அபாயம் அதிகமாக உள்ளது.[5]