கலாமண்டலம் சத்யபாமா | |
---|---|
பிறப்பு | 4 நவம்பர் 1937 ஷொர்ணூர் |
இறப்பு | 13 செப்டெம்பர் 2015 (அகவை 77) ஒற்றப்பாலம் |
வாழ்க்கைத் துணை/கள் | பத்மநாபன் நாயர் |
காலமண்டலம் வி சத்யபாமா (Kalamandalam V. Satyabhama ) (பிறப்பு: 4 நவம்பர் 1937 - இறப்பு: 13 செப்டம்பர் 2015) ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும், நடன ஆசிரியரும், நடன இயக்குநரும், மோகினியாட்டத்தில் இவரது நடிப்பு மற்றும் புலமைப்பரிசிலுக்கு பெயர் பெற்றவராவார். இவர் பாரம்பரிய நடன வடிவத்தின் தலைவியாக கருதப்படுகிறார். கேரளாவின் பிற பாரம்பரிய நடனங்களையும் இவர் நன்கு அறிந்தவர். கலை மற்றும் கலாச்சாரத்திற்கான பங்களிப்புகளுக்காக, 2014 ஆம் ஆண்டில், இந்திய அரசால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது .[2][3]
சத்தியபாமா 1937 ஆம் ஆண்டில், மட்டுப்படுத்தப்பட்ட நிதி ஆதாரங்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில், தென்னிந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காட்டிலிலுள்ள, பாரதப்புழா நதியின் கரையில் உள்ள சொரணூரிலுள்ள, ஒரு சிறிய தொழிலதிபர் கிருஷ்ணன் நாயர் மற்றும் அம்மினி அம்மா ஆகியோருக்குப் பிறந்தார். சொரணூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனது கல்விப் பள்ளிக்கு இணையாக, கலாமண்டலம் அச்சுத வாரியர் மற்றும் கலாமண்டலம் கிருஷ்ணன்குட்டி வாரியர் ஆகியோரின் பயிற்சியின் கீழ், கேரள கலாமண்டலத்தின் பகுதிநேர மாணவராக, சிறு வயதிலேயே, நடனத்தைக் கற்கத் தொடங்கினார். தனது 8 ஆம் வகுப்பினை முடித்ததும், கலாமண்டலத்தில் முழுநேர மாணவராக சேர்ந்தார்.[3] கலாமண்டலத்தின் தலைவரும் கலாமண்டலத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய முதல் நடன ஆசிரியருமான தோட்டசேரி சின்னம்மு அம்மாவின் [4] கீழ், மோகினியாட்டம் கற்கத் தொடங்கினார். இருப்பினும் படிப்பின் முக்கிய கவனம் பரதநாட்டியமாகவே இருந்தது. சின்னம்மு அம்மா இளம் சத்யபாமாவை செஞ்சுருட்டி மற்றும் தோடியில் அடவு (அடிப்படை இயக்கங்கள்), சோல்கெட்டு, ஜதீஸ்வரம் (எழுத்துக்கள் மற்றும் இசைக் குறிப்புகள்) போன்ற பல்வேறு நடன நுட்பங்களுக்கு அறிமுகப்படுத்தினார். விரைவில், சத்யபாமா புகழ்பெற்ற மலையாள கவிஞரும், கேரள கலாமண்டலத்தின் நிறுவனருமான வள்ளத்தோள் நாராயண மேனனின் கவனத்திற்கு வந்தார். அவர் பள்ளி கட்டணத்திற்க்கான உதவித்தொகையை வழங்கியதன் மூலம் இளம் ஆர்வலரின் திறன்களை மேலும் வளர்த்தார்.
1955 ஆம் ஆண்டில், கலாமண்டலத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் முன்னால், சத்தியபாமாவின் முக்கிய நடனம் மேடையில் அறிமுகமானது. இந்த நிறுவனத்தில் அடுத்த ஆறு வருட படிப்பு, கலாமண்டலம் சுற்றுலாக் குழுவின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை வழங்கியது. அங்கு இவர் பரதநாட்டியம், மோகினியாட்டம் மற்றும் கதகளி ஆகியவற்றை நிகழ்த்தினார். படிப்பு முடிந்ததும், கலாமண்டலத்தில் இளைய ஆசிரியராக சேர்ந்தார். பின்னர், பாரம்பரிய நடனத்தில் முக்கிய நபரான காமண்டலம் கல்யாணிகுட்டி அம்மாவிடமிருந்தும் அவர் பயிற்சி மேற்கொண்டார் .[1]
இந்த சமயத்தில்தான், கதகளி இலக்கணத்தின் எஜமானராக பரவலாகக் கருதப்படும் புகழ்பெற்ற கதகளி குருவான கலாமண்டலம் பத்மநாபன் நாயரை சத்தியபாமா சந்தித்தார். இவர்களது அறிமுகம் விரைவில் ஒரு காதல் திருப்பத்தை எடுத்தது. இதன் விளைவாக இவர்களின் திருமணம் முடிந்தது.[1] இவர்களுக்கு நான்கு மகள்கள் இருந்தனர். அவர்களில் இருவர் மோகினியாட்டத்தில் தீவிரமாக உள்ளனர். சத்யபாமா பாலக்காட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து 2015 செப்டம்பர் 13 அன்று தனது 77 வயதில் இறந்தார்.[5]
கலாமண்டலம் சத்யபாமா கேரள கலாமண்டலத்தின் முதல் பெண் துணை முதல்வராக இருந்தார். பின்னர் 1992 ல் ஓய்வு பெறும்போது அதன் முதல்வரானார்.[3][6] வருடாந்திர கலாமண்டலம் சக ஊழியரைத் தீர்மானிக்க இவர் தேர்வுக் குழுவில் அமர்ந்திருக்கிறார் [7] கேரள கலாமண்டலத்தின் தலைவராகவும் கவும் செயல்படுகிறார்.
ஒரு ஆசிரியராகவும் நடன இயக்குனராகவும் தனது கடமைகளில் கலந்து கொள்வதற்காக கலாமண்டலம் சத்தியபாமா தனது 24 வயதில் நிகழ்ச்சிகளில் இருந்து அமைதியாக ஓய்வு பெற்றார். எனவே, மேடை நிகழ்ச்சிகளில் இவரை விட நடன வடிவத்தில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இவர் அதிகம் மதிக்கப்படுகிறார்.
சத்தியபாமாவுக்கு பிராந்திய மற்றும் தேசிய அமைப்புகளால் பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.[3] மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது தவிர, 2005 ஆம் ஆண்டில் கேரள அரசின் நிருத்ய நாட்டிய புரஸ்காரம் பெற்றவர் இவர்.[8] 2006 இல் கொல்லம் கதகளி சங்கம் தனது முதல் சுவாதித் திருநாள் புரஸ்காரம் வழங்கியது.[9] சத்தியபாமாவுக்கு வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க விருதுகள் சில:
கேரள கலாமண்டலம் ஆண்டுதோறும் உதவித்தொகை வடிவில், மோகினியாட்டத்தின் தகுதியான மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சத்தியபாமாவின் நினைவாக ஒரு விருதை நிறுவியுள்ளது.[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)