கார்த்திகைத் திருநாள் இதிவிதான்கூ | |
---|---|
திருவிதாங்கூரின் மகாராஜா | |
![]() | |
ஆட்சி | 1758 - 1798 |
முன்னிருந்தவர் | மார்த்தாண்ட வர்மர் |
பின்வந்தவர் | பலராம வர்மன் |
மரபு | வேணாடு சொரூகுல |
அரச குலம் | குலசேகர வம்சம் |
சமயம் | இந்து சமயம் |
தர்ம ராஜா கார்த்திகைத் திருநாள் இராம வர்மன் (Dharma Raja Karthika Thirunal Rama Varma) (1724–1798 பிப்ரவரி 17) [1] இவர், தனது மாமா மார்த்தாண்ட வர்மாவுக்குப் பின் திருவிதாங்கூரை மகாராஜாவாக 1758 முதல் 1798 இல் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார். இவர், "நவீன திருவிதாங்கூரை உருவாக்கியவர்" என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது ஆட்சியின் போது தனது முன்னோர்கள் வைத்திருந்த அனைத்து பிரதேசங்களையும் தக்க வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், இராச்சியத்தையும் வெற்றிகரமாக நிர்வகித்தார். திப்பு சுல்தானின் மத மற்றும் இராணுவத் தாக்குதலின் போது மலபாரிலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தஞ்சம் அளித்து இவர் தர்ம சாத்திரத்தை கடுமையாக பின்பற்றியதன் காரணமாக இவர் தர்ம ராஜா என்று அழைக்கப்பட்டார்.
இராம வர்மன் ஆற்றிங்கல்லின் மூத்த ராணி மற்றும் இரவி வர்மா கோயில் தம்புரான் ஆகியோருக்கு மகனாக கி.பி. 1724இல் கிளிமானூர் அரண்மனையில் பிறந்தார். [2] இரவிவர்மன் தம்பியின் தாத்தாவான இளவரசர் மகரம் திருநாள் இவரது தம்பியாவார். அவர் இளம் வயதிலே இறந்துபோனார். இதனால் கார்த்திகைத் திருநாள் ஆட்சிக்கு வர முடிந்தது. இவரது தாயார் 1718 ஆம் ஆண்டில் கோலத்துநாட்டின் அரச இல்லத்திலிருந்து அப்போதைய வேணாட்டு மன்னரால் [3] திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டார். இவர், எட்டுவீட்டில் பிள்ளைமார் மற்றும் காயம்குளத்தின் ராஜா போன்றவர்களால் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் பிறந்தார் . கார்த்திகை திருநாளுக்கு நான்கு வயதாக இருந்த போது, 1728 இல், இளவரசர் தனது பெற்றோருடன் ஹரிப்பாடில் இருந்து புத்தனூரில் உள்ள பிராமணத் தலைவரான வஞ்சிப்புழா தம்புரானின் மாளிகைக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவரது தந்தை காயம்குளம் ராஜாவால், ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்தார். [4] இவர் வளர்ந்தவுடன், தனது மாமா மகாராஜா மார்த்தாண்ட வர்மனின் இராணுவ வெற்றிகளில் தீவிரமாக பங்கேற்றார். மேலும் கொச்சி முதல் வேணாடு வரை இராச்சியத்தை இணைத்து நவீன திருவிதாங்கூர் மாநிலத்தை நிறுவ இவருக்கு உதவினார்.
1758 இல் இவரது மாமா மார்த்தாண்ட வமன் இறந்தவுடன், கார்த்திகை திருநாள் இராம வர்மன் திருவிதாங்கூர் அரியணை ஏறினார். திவான் அய்யப்பன் மார்த்தாண்டப் பிள்ளையின் திறமையான சேவைகளுடன், கார்த்திகை திருநாள் தனது ஆட்சியைத் தொடங்கினார். இவரது மாமாவின் ஆட்சியின் கீழ், திருவிதாங்கூர் கேரளாவின் மிக சக்திவாய்ந்த மாநிலம் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தது. எனவே, அண்டைப் பகுதிகளின் தலைவர்கள் பலரும் மகாராஜாவுடன் நட்புடன் இருக்கவே விரும்பினர்.
கதகளி நாடகங்களின் இசையமைப்பாளராக ( ஆட்டகதை ). கதகளி கற்பிப்பதற்கான முறையான பாடத்திட்டத்தை அமைத்தார். இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் ஒரு நல்ல பாடகராகவும் அறிஞராகவும் இருந்த இவர் கர்நாடக இசையை வளப்படுத்திய சிறந்த கிருதிகளை [5] இயற்றினார். கார்த்திகை திருநாளின் கதகளி நாடகங்களின் வருகையால் கதகளியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. நாடகங்களின் கட்டமைப்பிலும், விளக்கக்காட்சியின் போது பின்பற்றப்பட வேண்டிய நுட்பத்திலும் மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன. சிருங்கார பதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. [6] ஒவ்வொரு கதாபாத்திரமும் சிருங்கார பதங்களுடன் மேடைக்குள் நுழைய வேண்டும் என்ற விதி இவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேடை விளக்கக்காட்சி, பல்வேறு மற்றும் கதாபாத்திரங்களின் தெளிவு மற்றும் கதையில் அதன் தொழில்நுட்ப மேன்மையின் காரணமாக இவரது கதகளி நாடகங்கள் அனைத்தும் மிகவும் பிரபலத்தையும் புகழையும் பெற்றன. ஏழு நாடகங்களை இவர் வரவு வைத்திருக்கிறார்:
கார்த்திகை திருநாள் மகாராஜாவுக்கு நான்கு மனைவிகள் அல்லது அம்மாச்சிகள் இருந்தனர் . இவரது முதல் மனைவி வடசேரியைச் சேர்ந்த பனபிள்ளை காளி அம்மா நாகமணி அம்மா என்பவராவார். இவரது மற்ற மூன்று மனைவிகள் திருவட்டாறு, அருமனை, மற்றும் நாகர்கோயில் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர் 18 ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் திருவனந்தபுரத்தில் தனது மனைவிகளுக்காக நான்கு அம்மாவீட்டுகளைக் கட்டினார். மகாராஜாவின் சகோதரர் புதுமனை அம்மவீட்டில் திருமணம் செய்து கொண்டார். இஅவரது பேரன் கவிஞர் இரவிவர்மன் தம்பி ஆவார். [8]
மகாராஜா 1798 பிப்ரவரி 17 அன்று தனது 74 வயதில் இறந்தார். இவர் திருவிதாங்கூரின் இறையாண்மையை பராமரித்து, திப்பு சுல்தானின் மைசூர் படைகளால் தனது பகுதிகளை அழிவிலிருந்து பாதுகாத்தார். இவர் தனது மாமா மார்தாண்டா வர்மன் மூலம் ஆங்கிலேயர்களுடன் ஒரு நல்ல நட்பைப் பேணி வந்தார். மிக முக்கியமாக, திப்பு சுல்தானால் கட்டாய மதமாற்றத்திலிருந்து தப்பி வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவர் அளித்த புகலிடம் காரணமாக இவர் தர்ம ராஜா என்று அறியப்பட்டார்.