குடா குடைவரைகள் | |
---|---|
குடா குடைவரைகள் | |
ஆள்கூறுகள் | 18°17′07″N 73°04′23″E / 18.285214°N 73.073175°E |
குடா குடைவரைகள் (Kuda Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தெற்கு கொங்கண் கடற்கரை பகுதியில், முராத்-ஜின்சிரா[1] தீவுக்கோட்டையின் வடக்கு கடற்கரையில் அமைந்த குடா எனும் கிராமத்தின் மலைக்குன்றில் அமைந்த 15 குடைவரைகளின் தொகுதியாகும். குடா குடைவரைகள் கிமு முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.[2]
இக்குடைவரை சைத்தியத்தின் தாழ்வாரத்தில் கௌதம புத்தரின் சிறபங்கள் தாமரை, தர்மச்சக்கரம் மற்றும் நாகங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. பின்னர் கிபி 5-6-ஆம் நூற்றாண்டுகளில் இக்குடைவரைகளை மகாயனப் பிரிவின் பௌத்த பிக்குகள் கையகப்படுத்தி மேலும் குடைவரைகளில் மேலும் பல சிற்பங்களை செதுக்கினர்.[2] முதல் குடைவரையில் குடைவரை நிறுவ் நன்கொடை அளித்தவர்களின் பெயர் பொறித்த கல்வெட்டு உள்ள்து. ஆறாவது குடைவரையின் வாயிலில் ஒரு யாணைச் சிற்பங்கள் உள்ளது..[3]இக்குடைவரையை நிறுவ நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது..[2]