கோட்டக்கல் பூரம் (Kottakkal pooram) என்பது இந்தியாவின், கேரளத்தில், உள்ள மலப்புறம் மாவட்டம், கோட்டக்கல்லின் விஸ்வம்பரர் கோயிலில் நடக்கும் கோயில் திருவிழா ஆகும்.
மருத்துவம் மற்றும் நலவாழ்வுக்கான கடவுளான தன்வந்தாரிக்கான திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. [1]
திருவிழாவில் நடைபெறும் பிரமாண்ட கொண்டாட்டங்களில் பிரபல கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும். விழா நடக்கும் ஏழு நாட்களில், நாட்டின் பிரபல பாரம்பரிய கலைஞர்கள் இங்கு தங்கள் கலைகளை நிகழ்த்துவார்கள் [2] . கலாச்சார நிகழ்ச்சிகளில் குறிப்பாக கதகளி, மோகினியாட்டம் ஆகியவை அடங்கும் [3]