கோமல் கோத்தாரி (Komal Kothari) என்பவர் இராசத்தான் மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய நாட்டுப்புற கலைஞர் மற்றும் பாடகர் ஆவார்.[1][2]
கோத்தாரியின் நாட்டுப்புறக் கதைகளின் பல பகுதிகள் பற்றிய ஆய்வு செய்துள்ளார். இது இவரது வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குறிப்பாக, இவர் நாட்டுப்புற இசைக்கருவிகள், செவிவழி மரபுகள் மற்றும் பொம்மலாட்டம் பற்றிய ஆய்வில் சிறப்பான பங்களிப்பினை செய்துள்ளார்.[3]
கோத்தாரி லங்கா மற்றும் மங்கனியார் நாட்டுப்புற இசையின் புரவலராகவும் இருந்தார். மங்கனியர் நாட்டுப்புறப்பாடல்கள் 'பிச்சைக்காரர்கள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது மெராசிக்கு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இவர்தான் முதலில் இவற்றைப் பதிவுசெய்து, இவர்களின் பாரம்பரியப் பகுதிகளிலிருந்து வெளிக்கொணர உதவினார்.[5] இதற்காக, 'பிரேர்ணா ' என்ற பத்திரிகையையும் நிறுவினார்.
கோத்தாரி, சண்டி தான் தேத்தா என்பவரால் நிறுவப்பட்ட ரூபயன் சன்ஸ்தானின் தலைவராகவும் இருந்தார். மேலும் ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதைகள், கலைகள் மற்றும் இசையை ஆவணப்படுத்தும் நிறுவனத்தில் ராஜஸ்தானின் பொருண்டா கிராமத்தில் விஜயதன் தேத்தாவுடன் பணிபுரிந்தார். மேலும் இவரது பணியின் பெரும்பகுதியை ராஜஸ்தான் சங்கீத நாடகத்தில் கழிந்தது. இவர் ஏப்ரல் 2004-ல் புற்றுநோய் காரணமாக இறந்தார்.
1979ஆம் ஆண்டு இவரது இனமரபு இசை ஆய்வியல் பணி பற்றிய ஒரு ஆவணப்படமும் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய மற்றொரு படமும் (கோமல் டா), கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.[3]