சமரேந்திரநாத் ராய் | |
---|---|
இயற்பெயர் | সমরেন্দ্রনাথ রায় |
பிறப்பு | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | 11 திசம்பர் 1906
இறப்பு | 23 சூலை 1964 ஜாஸ்பெர், ஆல்பர்ட்டா கனடா | (அகவை 57)
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
துறை | கணிதவியாலாளர் மற்றும் புள்ளியியலாளர் |
பணியிடங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் இந்தியப் புள்ளியியல் கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) |
கல்வி கற்ற இடங்கள் | ராஜாபஜார் அறிவியல் கல்லூரி (கொல்கத்தா பல்கலைக்கழகம்) |
ஆய்வு நெறியாளர் | பிரசந்தா சந்திரா மகாலனோபிசு என். ஆர். சென் |
முனைவர் பட்ட மாணவர்கள் | இன்கிராம் ஒல்கின் |
அறியப்படுவது | பன்முக பகுப்பாய்வு |
சமேரேந்திர நாத் ராய் (Samarendra Nath Roy) (பிறப்பு:11 டிசம்பர் 1906: இறப்பு: 23 சூலை 1964) ஐக்கிய அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வங்காள கணிதவியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ஆவார். பன்முக பகுப்பாய்விற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
இவர் 1931ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இராஜா பஜார் அறிவியல் கல்லூரியில் பயன்பாட்டு கணிதவியலில் இளநிலை அறிவியியல் பட்டம் பெற்றார். பின்னர் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் தலைவரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசுவின் கீழ் புள்ளியியலில், பன்முக பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][3]
சமேரேந்திரநாத் ராய் 1950 முதல் 1963 முடிய வடகரோலினா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[4] பின்னர் இந்தியா திரும்பி இந்தியப் புள்ளியியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியாகச் சேர்ந்தார்.