சாதிக்கலி அப்பாசு ரங்வாலா (Sadiqali Abbas Rangwala) என்பவர் ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். சோதனைமுறை அணுவியல், மூலக்கூறு மற்றும் ஒளி இயற்பியல் பிரிவுகளில் இவர் பணிபுரிந்தார் [1]. இந்தியாவில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 2014 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது [2][3][4]