சாந்தா தத்தா Shanta Dutta | |
---|---|
![]() சாந்தா தத்தா | |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துறை | நுண்ணுயிரியியல் |
பணியிடங்கள் | தேசிய காலரா மற்றும் குடல்சார் நோயியல் நிறுவனம் |
கல்வி | கொல்கத்தா பல்கலைக்கழகம், இளநிலை மங்களுர் பல்கலைக்கழகம், முதுநிலை கியுசூ பல்கலைக்கழகம், முனைவர் |
சாந்தா தத்தா (Shanta Dutta) என்பவர் ஒர் இந்திய நுண்ணுயிரியலாளராவார். தற்போது தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். [1] குடல்சார் நோய் குறித்த 23 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி அனுபவம் இவருக்கு உள்ளது. [2]
1986 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.பி.எசு மருத்துவப் படிப்பை இவர் முடித்தார். 1992 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் மங்களூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியலை மையமாகக் கொண்டு மருத்துவ முதுநிலை படிப்பை முடித்தார். 2006 ஆம் ஆண்டு இவர் சப்பானின் கியுசூ பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். [1]
1994 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதியன்று தத்தா இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் 12 ஆம் நாள் இவர் பாக்டீரியா நோயியல் பிரிவில் தேசிய காலரா மற்றும் குடல்சார் நோய்கள் நிறுவனத்தில் விஞ்ஞானி (இயக்குநர்) ஆனார். [1]
2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 தேதியில் சாந்தா தத்தாவிற்கு கொரோனா வைரசு நோய் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. [3] iந்த நேரத்தில் நிமோனியா நோயாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். [4] பின்னர் குணமடைந்து சூலை முதல் வாரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். [5]