சாம் பிட்ரோடா | |
---|---|
2009 இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பிட்ரோடா | |
பிறப்பு | 16 நவம்பர் 1942[1] தித்லாகர், ஒரிசா, பிரித்தானிய இந்தியா (நவீன ஒடிசா, இந்தியா) |
குடியுரிமை | இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், சிக்காக்கொ |
பணி | தொலைத்தொடர்பு பொறியாளர், தொலைமுனைவர் |
பணியகம் | பொதுத் தகவல், உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளில் பிரதமரின் முன்னாள் ஆலோசகர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைத் துணை | அஞ்சனா (தி. 1966) |
வலைத்தளம் | |
www |
சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா (Satyanarayan Gangaram Pitroda) (பிறப்பு; நவம்பர் 16,1942) சாம் பிட்ரோடா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய தொலைத்தொடர்பு பொறியாளரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.[2] இவர் கிழக்கிந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள தித்லாகரில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார்.[3] அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராகவும் இருந்தார்.[4] இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதம மந்திரிக்கு ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடா இந்தியாவின் தொலைத் தொடர்புப் புரட்சிக்குப் பொறுப்பானவராகவும் கருதப்படுகிறார்.[5]
பிட்ரோடா இந்தியாவின் ஒடிசாவிலுள்ள தித்லாகரில் ஒரு குஜராத்தி பெற்றோருக்கு பிறந்தார்.
1966 ஆம் ஆண்டில் இவர் சிகாகோவிலுள்ள ஜி. டி. இ. தொலை தொடர்பு நிறுவனத்தில் சேர்ந்தார். [6]1975 ஆம் ஆண்டு மின்னணு நாட்குறிப்பேட்டை இவர் கண்டு பிடித்தார். இதன் காரணமாக, கையால் இயக்கப்படும் கணினிக் கணக்கிடல் தொழில் நுட்பத்தின் ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்..[7]
1981 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பி, இந்தியாவின் தொலைத்தொடர்பு முறையை நவீனமயமாக்க உதவ முடிவு செய்தார்.[8]1984 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில் இந்தியா திரும்பிய பிட்ராடோ, தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டிற்கான மையமான சி-டாட் என்ற மையத்தைத் தொடங்கினார். அமெரிக்க குடிமகனாக இருந்த இவர் இந்திய அரசாங்கத்தில் பணியாற்ற மீண்டும் இந்திய குடியுரிமையைப் பெற தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்.[9]
1990களில் பிட்ரோடா தனது வணிக நலன்களை மீண்டும் தொடங்க சிகாகோ திரும்பினார். மே 1995 இல், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் வேர்ல்ட் டெல் முன்முயற்சியின் முதல் தலைவராக ஆனார்.[10]
1993 ஆம் ஆண்டில், பிட்ரோடா (தர்ஷன் சங்கருடன் இணைந்து ) உள்ளூர் சுகாதார பாரம்பரியத்தின் புத்துயிர் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் பெங்களூருக்கு அருகே உள்ள இடைநிலை சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றை நிறுவ உதவினார். இந்த அறக்கட்டளை இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவான ஆயுர்வேதத்தை ஊக்குவிக்கிறது.[11]
அக்டோபர் 2009 இல், பிட்ரோடா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொது தகவல் உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிட்ரோடா 2010 இல் தேசிய கண்டுபிடிப்பு மன்றத்தை நிறுவினார்.[12] ஆகஸ்ட் 2010 இல், அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[13] 1992 ஆம் ஆண்டில், இவரது சுயசரிதை வெளியிடப்பட்டது.[14]
2024 இந்தியப் பொதுத் தேர்தலின் போது,பரம்பரை வரி குறித்து பிட்ரோடா கருத்து தெரிவித்தார். அதில் அமெரிக்காவின் சொத்து செல்வ மறுவிநியோகக் கொள்கையைக் கூறி இந்தியாவிலும் அதைப் பின்பற்றவேன்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. .[15] [16][17]
2019 இந்தியப் பொதுத் தேர்தலின் போது 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் குறித்து பிட்ரோடா கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.[18] சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்ட உடனேயே, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் இந்திய வெளிநாட்டு காங்கிரசின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.