சாம்ரி அப்துல் காதர் Yang Berhormat YB Zambry Abdul Kadir | |
---|---|
![]() சாம்ரி அப்துல் காதர் (2023-ஆம் ஆண்டு) | |
மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 டிசம்பர் 2023 | |
ஆட்சியாளர் | பேரரசர் சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
Deputy | முசுதபா சக்முத் |
முன்னையவர் | முகம்மது காலித் நோர்டின் |
தொகுதி | செனட்டர் |
மலேசிய வெளியுறவு அமைச்சர் | |
பதவியில் 3 டிசம்பர் 2022 – 12 டிசம்பர் 2023 | |
ஆட்சியாளர் | பேரரசர் சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
Deputy | முகமது ஆலமின் |
முன்னையவர் | சைபுதீன் அப்துல்லா |
பின்னவர் | முகமது அசன் |
தொகுதி | செனட்டர் |
செனட்டர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2022 | |
ஆட்சியாளர் | பேரரசர் சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
பொது செயலாளர் பாரிசான் நேசனல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 சூன் 2021 | |
முன்னையவர் | அகமட் மசுலான் |
எதிர்க்கட்சித் தலைவர் பேராக் | |
பதவியில் 3 சூலை 2018 – 1 ஆகஸ்டு 2018 | |
ஆட்சியாளர் | சுல்தான் நசுரின் சா |
முன்னையவர் | முகமது நிசார் ஜமாலுதீன் |
பின்னவர் | சராணி முகமது |
தொகுதி | பங்கோர் சட்டமன்ற தொகுதி |
11-ஆவது பேராக் மந்திரி பெசார் | |
பதவியில் 12 மே 2009 – 12 மே 2018 | |
ஆட்சியாளர்கள் | சுல்தான் அசுலான் சா (2009–2014) நசுரின் சா (2014–2018) |
முன்னையவர் | முகமது நிசார் ஜமாலுதீன் |
பின்னவர் | அகமத் பைசல் அசுமு |
தொகுதி | பங்கோர் |
பேராக் மாநில ஆட்சிக்குழு (கல்வி, மனித வளம், பல்லூடகம்: 31 மார்ச் 2004–28 செப்டம்பர் 2006) (கல்வி, உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: 28 செப்டம்பர் 2006–16 மர்ச் 2008) | |
பதவியில் 31 மார்ச் 2004 – 16 மார்ச் 2008 | |
ஆட்சியாளர் | அசுலான் சா |
முன்னையவர் | அப்துல் மாலேக் முகமது அனாபியா (கல்வி) ஜமால் நசீர் ரசுதி (மனித வளம்) ராம்லி சகாரி (பல்லூடகம்) |
பின்னவர் | நிகா கோர் மிங் (கல்வி) சூ கியோங் சியோங் (கல்வி, உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்) |
தொகுதி | பங்கோர் |
சட்டமன்ற உறுப்பினர் Member பங்கோர் | |
பதவியில் 21 மார்ச் 2004 – 19 நவம்பர் 2022 | |
முன்னையவர் | முகமது வசிதி இசாக் (பாரிசான்–அம்னோ) |
பின்னவர் | நார் அசிலிண்டா சகாரியா (பெரிக்காத்தான்–பெர்சத்து) |
பெரும்பான்மை | 5,669 (2004) 5,785 (2008) 5,124 (2013) 1,626 (2018) |
நிர்வாகமற்ற தலைவர் மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | |
பதவியில் 12 ஆகஸ்டு 2020 – 15 டிசம்பர் 2022 | |
அமைச்சர் | வீ கா சியோங் (2020–2022) அந்தோனி லோக் (2022) |
முன்னையவர் | சைனுன் அலி |
2020–2022 | பாரிசான் BN |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாம்ரி அப்துல் காதர் 22 மார்ச்சு 1962 பங்கோர் தீவு, பேராக், மலாயா கூட்டமைப்பு |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (UMNO) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் BN |
துணைவர் | சரிபா சுல்கிப்லி |
பிள்ளைகள் | 5 |
வாழிடம் | கம்போங் மசூதி, புலாவ் பாங்கோர், பேராக் |
முன்னாள் மாணவர் | மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (AB & MA) டெம்பிள் பல்கலைக்கழகம் (MA & PhD.) |
பணி | அரசியல்வாதி |
இணையத்தளம் | zambry www |
டத்தோ ஸ்ரீ ராஜா சாம்ரி அப்துல் காதர் (ஆங்கிலம்; மலாய்: Zambry bin Abdul Kadir; சீனம்: 赞比里阿都卡迪; சாவி: زمبري بن عبدالقادر ; (பிறப்பு: 22 மார்ச் 1962) என்பவர்; 2023 டிசம்பர் மாதம் தொடங்கி பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் (Unity Government) கீழ் மலேசிய உயர்க்கல்வி அமைச்சராக (Minister of Higher Education) பொறுப்பு வகிக்கிறார். இவர் 2023 டிசம்பர் மாதம் மலேசியாவின் மேலவை செனட்டராக நியமிக்கப்பட்டவர்.[1]
இவர் டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2023 வரை பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் ஆகும்.
சாம்ரி அப்துல் காதர் 22 மார்ச் 1963 அன்று மலேசியா பேராக், மாநிலத்தில் உள்ள சுற்றுலா மீனவர்களின் குடியேற்றத் தீவான புலாவ் பாங்கோர் தீவில் பிறந்தார். அவர் 6 பிப்ரவரி 2009 அன்று பேராக் மந்திரி பெசார் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் பேராக் மாநிலத்தின் 11-ஆவது முதல்வர் ஆவார்.
இவரின் மனைவியின் பெயர் சரிபா சுல்கிப்லி. இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள்; இரண்டு ஆண் பிள்ளைகள் - அசுனா, உதா, சைபா, முனீர் மற்றும் முக்லிசு.
சாம்ரி தன் தொடக்க நிலைக் கல்வியை பங்கோர் தீவு தொடக்க நிலைப் பள்ளியிலும்; இடைநிலைக் கல்வியை சித்தியவான் நகரில் உள்ள சித்தியவான் இடைநிலைப் பள்ளியிலும்; பாரிட் புந்தார் நகரில் உள்ள புக்கிட் கந்தாங் மேல்நிலைப் பள்ளியில் தன் மேல்நிலை கல்வியையும் பெற்றார்.
1991-ஆம் ஆண்டில் மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் தம் முதுகலை பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1995-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தில் (Temple University) முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 எனும் 2009-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் சாம்ரி அப்துல் காதர் மிக முக்கியமான பங்கு வகித்ததாக அறியப்படுகிறது.
அந்த நெருக்கடியின் இறுதிக் கட்டத்தில், பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாம்ரி அப்துல் காதர் பேராக் மந்திரி பெசார் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர்[3] அதனால், மாநில ஆட்சி உடைந்தது.
இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார். பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் பேராக் மந்திரி பெசார் முகமது நிசார் சமாலுதீன் கோரிக்கை வைத்தார்.
இதை பேராக் சுல்தான் பேராக் சுல்தான் அசுலான் சா நிராகரித்தார். அதற்குப் பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.[4]