சாரதா பீடம் | |
---|---|
சாரதா பீடத்தின் சிதிலங்கள் | |
ஆள்கூறுகள்: | 34°47′35″N 74°11′19″E / 34.79306°N 74.18861°E |
பெயர் | |
தேவநாகரி: | शारदा पीठम् |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | Śāradā pīṭham |
அமைவிடம் | |
அமைவு: | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சாரதா (சரசுவதி) |
சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.[1] சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.
பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்[2][3][4] இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாஃபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.[5] அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர், பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.
கி பி 632இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.
காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்கணர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமசுகிருத நூலில் சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.
இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 - 1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.
பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.
{{cite book}}
: Invalid |ref=harv
(help).