சித்தாரா | |
---|---|
பிறப்பு | 30 சூன் 1973 கேரளம், கிளிமானூர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–2000 2004–தற்போது வரை |
அறியப்படுவது | புதுப்புது அர்த்தங்கள் புது வசந்தம் |
பெற்றோர் | பரமேஸ்வரன் நாயர் வத்சளா நாயர் |
சித்தாரா (பிறப்பு சித்தாரா நாயர் ) என்பவரு ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் கே. பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் படையப்பா, ஹாலுத தவரு, புது வசந்தம் போன்ற பெருவெற்றிபெற்ற படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவர் தொலைக்காட்சியில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[1][2][3]
முப்பது ஆண்டுகளாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்துள்ளார். இவரது சமீபத்திய தெலுங்கு வெற்றிப்படங்களில் ஸ்ரீமந்துடு, சங்கராபரணம், பாலே பலே மகாடுவியா ஆகியவை அடங்கும்.[4]
சித்தரா தமிழகத் திரைத்துறைக்கு கின்னஸ் சாதனையாளர் இசாக் இயக்கிய, நாகேஷ் திரையரங்கம் எனும் படத்தில் நடித்ததன் மூலம் மறு பிரவேசம் செய்துள்ளார்.[5][6][7]
கேரளத்தின் கிளிமானூரில் பரமேஸ்வரன் நாயர் மற்றும் வல்சலா நாயர் ஆகியோரின் மூன்று குழந்தைகளில் மூத்தவராக சித்தாரா பிறந்தார். இவரது தந்தை பரமேஸ்வரன் நாயர் மின்சார வாரியத்தில் பொறியாளராகவும், அவரது தாயார் மின்சார வாரியத்திலும் அதிகாரியாக இருந்தார். இவருக்கு பிரதீஷ் மற்றும் அபிலாஷ் என்ற இரண்டு தம்பிகள் உள்ளனர். திருவனந்தபுரத்தின் வட்டப்பாறை, லூர்து மவுண்ட் பள்ளியில் படித்தார். கிளிமனூரில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யபீடம் கல்லூரியில் முன் பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தனது முதல் படமான காவேரியில் நடித்தார்.[8]
ஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
1989 | புதுப்புது அர்த்தங்கள் | ஜோதி | |
1990 | உன்னைச் சொல்லி குற்றமில்லை | ஜனகி | |
1990 | புதுப்புது ராகங்கள் | சாரதா | |
1990 | மனைவி வந்த நேரம் | ||
1990 | புது வசந்தம் | கௌரி | |
1990 | புரியாத புதிர் | சிந்து | |
1990 | ஒரு வீடு இரு வாசல் | விருந்தினர் தோற்றம் | |
1991 | பாட்டொன்று கேட்டேன் | சினேகா | |
1991 | அர்ச்சனா ஐ. ஏ. எஸ். | அர்ச்சனா | |
1991 | ஆடி விரதம் | சாவித்ரி | |
1992 | காவல் கீதம் | பிரியா | |
1992 | என்றும் அன்புடன் | நந்தினி | |
1992 | மாதா கோமாதா | சாந்தி | |
1993 | மாமியார் வீடு | ஆனந்தவள்ளி | |
1993 | பெற்றெடுத்த பிள்ளை | கல்யாணி | |
1994 | பொண்டாட்டியே தெய்வம் | பரிமளா, சியாமளா | |
1995 | தாய் தங்கை பாசம் | கல்யாணி | |
1998 | நட்புக்காக | கௌரி | |
1999 | சின்னதுரை | மரகதம் | |
1999 | படையப்பா | படையப்பாவின் சகோதரி | |
2000 | மனுநீதி | பூங்கொடியின் தாய் | |
2000 | முகவரி | சாந்தா | |
2000 | திருநெல்வேலி | வரதப்பனின் மனைவி | |
2011 | சரித்திரம் | ||
2013 | மத்தாப்பூ | கார்த்திக்கின் சகோதரி | |
2013 | படம் பேசும் | தாமதமாக | |
2014 | பூஜை | ராமசாமியின் மனைவி | |
2017 | முன்னோடி | சத்யாவின் தாய் | |
2018 | நாகேஷ் திரையரங்கம் | நாகேஷின் தாய் |
பெயர் | அலைவரிசை | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
சுவாதி சினுகுலு | ஈடிவி நெட்வொர்க் | தெலுங்கு | பாத்திரம்-துளசி |
பராசக்தி | வசந்த் தொலைக்காட்சி | தமிழ் | |
கவரி மான்கல் | ஜெயா டி.வி. | தமிழ் | கதாபாத்திரம்-சந்தியா |
ஆரத்தி | ராஜ் தொலைக்காட்சி | தமிழ் | பாத்திரம்-ஆரத்தி |
சிந்தூரம் | ஏஷ்யாநெட் | மலையாளம் | |
ஈத்தரம் | மலையாளம் | ||
சினேகா | ஏஷ்யாநெட் | மலையாளம் | |
சம்மர் இன் அமெரிக்கா | கைரளி தொலைக்காட்சி | மலையாளம் | பாத்திரம்-மீரா |
கங்கா யமுனா சரஸ்வதி | ராஜ் தொலைக்காட்சி | தமிழ் | தொலைக்காட்சியில் அறிமுகம் |
சித்தாரா தன் வாழ்வின் துவக்கதில் எடுத்த முடிவின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.[9]