சிபென்சர் லீ மார்சன்டு மூரே (Spencer Le Marchant Moore) (1 நவம்பர் 1850 – 14 மார்ச்சு 1931) என்பவர் இங்கிலாந்து நாட்டு தாவரவியலாளர் ஆவார். இவர் இங்கிலாந்தில் (Hampstead) பிறந்தவர். இவ்வறிஞர் அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ ஆய்வகத்தில், 1870 முதல் 1879 வரை பணியாற்றினார். அப்பொழுது தாவரங்களைக் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். பிறகு இறக்கும் வரை, 1896 ஆம் ஆண்டு வரை, இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன் சிறப்பு நிலை ஆய்வாளராக பணியாற்றினார். திசம்பர் 1894 முதல் அக்டோபர் 1895 வரை மேற்கு ஆஸ்திரேலியா தொலைதூரப் பகுதிகளுக்கான பயணத்தில் அவர் ஈடுபட்டார்.[1] தாவரப் பேரினமான, சிபென்சிரயா (Spenceria) இவரினை நினைவுக்கூற உருவாக்கப்பட்டது.[2]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{citation}}
: Check |last=
value (help)