சிரி கோட்டை புது தில்லி நகரில் உள்ளது. தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்சியின் ஆட்சியில் மங்கோலியர்களின் தாக்குதலில் இருந்து நகரத்தை பாதுகாக்க இக்கோட்டை கட்டப்பட்டது. இது 1303 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இடைக்கால டெல்லியின் ஏழு நகரங்களில் இரண்டாவதாகும் (இது முதன்முதலில் துருக்கியர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது). தற்போது இது ஒரு சில எச்சங்களுடன் இடிபாடுகளாக மட்டுமே காணப்படுகிறது. (படம்) [1] [1]
சிரி கோட்டையின் அருகே நவீன அரங்குகள், ஆசிய விளையாட்டு மற்றும் கிராம வளாகம், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இது தென் தில்லியின் மையப்பகுதியில் உள்ள கெல் காவ்ன் மார்க் மற்றும் அரவிந்தோ மார்க் ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள நவீன நிலப்பரப்புகளை நிரப்புகின்றன.
அலாவுதீன் கில்ஜி வம்சத்தில் மிகவும் பிரபலமானவர். ஏனெனில் அவர் தனது ஆதிக்கத்தை தென்னிந்தியாவுக்கு விரிவுபடுத்தி, டெல்லியில் இரண்டாவது நகரமான சிரியை நிறுவினார். [2] இந்தியா மற்றும் டெல்லி மீதான மங்கோலிய படையெடுப்பிலிருந்து பாதுகாக்க அவர் 1297 மற்றும் 1307 க்கு இடையில் மிகப் பெரிய கோட்டையான சிரியை உருவாக்கினார். இக்கோட்டை அவரது பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இடமாக செயல்பட்டது. தென்மேற்கு ஆசியாவில் அடிக்கடி மங்கோலிய படையெடுப்புகள் காரணமாக, செல்யூக்கள் டெல்லியில் தஞ்சம் புகுந்தனர். செல்யூக் வம்சத்தின் கைவினைஞர்களால் டெல்லியில் உள்ள இந்த சகாப்தத்தின் கட்டடக்கலை நினைவுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டது. [3]
1303 ஆம் ஆண்டில், மங்கோலிய ஜெனரலான தர்கி, இந்தியாவுக்கு எதிரான மங்கோலிய படையெடுப்பின் போது அலாவுதீன் கில்சி பின்வாங்கியதால் சிரி கோட்டையை முற்றுகையிட்டார். சிரி கோட்டைக்குள் தர்கியால் ஊடுருவ முடியாததால், இறுதியாக அவர் மத்திய ஆசியாவில் உள்ள தனது ராச்சியத்தை நோக்கி பின்வாங்கினார். அதைத் தொடர்ந்து வந்த, அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களை அம்ரோஹாவில் (1306) தோற்கடித்தன.
இப்போது புதுடில்லியின் ஒரு பகுதியாக இருக்கும் சிரி, சகான்பனாவின் கோட்டைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. சிரி பின்னர் "தாருல் கிலாபத்" அல்லது " கலிஃபோர்ஸின் இருக்கை" என்றும் அழைக்கப்பட்டது. [4] கி.பி 1398 இல், டெல்லி மீது படையெடுத்த மங்கோலிய ஆட்சியாளரான திமுர்லேன் தனது நினைவுக் குறிப்புகளில் "சிரி நகரத்தைச் சுற்றி உள்ளது. அதன் கட்டிடங்கள் உயர்ந்தவை. அவை கல் மற்றும் செங்கல் ஆகியவற்றால் கட்டப்பட்ட கோட்டைகளால் சூழப்பட்டுள்ளன. அவை மிகவும் வலிமையானவை" என எழுதினார். சிரி கோட்டையிலிருந்து பழைய டெல்லி வரை, இது கணிசமான தூரம் கல் மற்றும் சிமெண்டால் கட்டப்பட்ட ஒரு வலுவான சுவரை கொண்டுள்ளது. சகான்பனா என்று அழைக்கப்படும் பகுதி மக்கள் வசிக்கும் நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது. மூன்று நகரங்களின் (பழைய டெல்லி, சிரி மற்றும் துக்ளகாபாத் ) கோட்டைகளில் முப்பது வாயில்கள் உள்ளன. சகான்பனாவிற்கு பதிமூன்று வாயில்களும், சிரிக்கு ஏழு வாயில்களும் உள்ளன. பழைய டெல்லியின் கோட்டைகளில் பத்து வாயில்கள் உள்ளன. சில வாயில்கள் வெளிப்புறத்தை நோக்கியும், சில வாயில்கள் நகரின் உட்புறத்தை நோக்கியும் திறக்கப்படுவதாக உள்ளன.
அலாவுதீனுடனான போரில் கொல்லப்பட்ட சுமார் 8,000 மங்கோலிய வீரர்களின் துண்டிக்கப்பட்ட தலைகளினால் கோட்டையின் அடித்தளம் கட்டப்பட்டது. (இந்தியில் 'சிர்' என்றால் "தலை") [5] [6] [7] இதனால் கோட்டைக்கு சிரி என்ற பெயர் வழங்கப்பட்டது.
டெல்லிக்கு அருகிலுள்ள ஒரு பழைய முகாமில் குதாப் மினாரின் வடகிழக்கில் 5 கிலோ மீட்டர் தொலைவில் சிரி கோட்டை கட்டப்பட்டது. [3] முதல் நகரம் முஸ்லிம்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. அது ஒரு முட்டை வடிவத்தில் இருந்தது. அதன் இடிபாடுகள் தற்போது சுமார் 0.7 சதுர மைல் பரப்பளவில் காணப்படுகின்றன. [2]
Century passed before the first complete Muslim City of Delhi was built by Allauddin Khalji (AD 1296-1316). Having repelled Mongol riders, Allauddin walled his camp just north of Qila Rai Pithora and peopled it. Local legend in fact, traces the name of Siri to the 8000 heads – the Hindustani word for head is "Sir" – of defeated Mongols that were supposed to be embedded in the city walls.
{{cite book}}
: Cite has empty unknown parameter: |chapterurl=
(help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)