Sukhalata Rao | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, வங்காள மாகாணம், இந்தியா | 23 அக்டோபர் 1886
இறப்பு | 9 சூலை 1969 கட்டக், ஒடிசா, இந்தியா | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
கல்வி | பெதுன் கல்லூரி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் |
பணி | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பெகுலா, நீஜ் போரா |
அரசியல் இயக்கம் | வங்காள கலைப் பள்ளி |
தந்தை | உபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி |
உறவினர்கள் |
|
விருதுகள் | கைசர்-இ-ஹிந்த்-1956 |
சுகலதா ராவ் (Shukhalata Rao)(1886–1969) என்பவர் ஓர் இந்தியச் சமூக சேவகரும், கலைஞரும் குழந்தைகள் புத்தக எழுத்தாளரும் ஆவார். இவர் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்தார். இவர் உபேந்திரகிஷோர் ராய் சவுத்ரியின் மகளும், சுகுமார் ராயின் சகோதரியும் ஆவார். இவர் பெதுன் கல்லூரியில் படித்து, இளங்கலைப் பட்டம் பெற்றார்.
சுகலதா கட்டக்கைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்த் ராவை மணந்தார். கட்டாக்கிற்குக் குடிபெயர்ந்த பிறகு, சுகலதா சிசூ-ஓ-மாத்ரி மங்கல் கேந்திரோவை ('குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனுக்கான மையம்') நிறுவினார். இவர் ஒடிசா பெண் சக்தி சேவைச் சங்கத்தையும் நிறுவினார்.[1]
சுகலதா, அலோக் என்ற செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார்.[1] இவர் குழந்தைகள் கதைகள், விசித்திரக் கதைகள் எனப் பலவகையான கதைகளை எழுதியுள்ளார்.
சுகலதா ராவ் தனது நிஜே போரா என்ற புத்தகத்திற்காக 1956-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு கைசர்-இ-ஹிந்த் விருதினை வழங்கியது.[1]