சுகலதா ராவ்

Sukhalata Rao
பிறப்பு(1886-10-23)23 அக்டோபர் 1886
கொல்கத்தா, வங்காள மாகாணம், இந்தியா
இறப்பு9 சூலை 1969(1969-07-09) (அகவை 82)
கட்டக், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விபெதுன் கல்லூரி
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பெகுலா, நீஜ் போரா
அரசியல் இயக்கம்வங்காள கலைப் பள்ளி
தந்தைஉபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி
உறவினர்கள்
விருதுகள்கைசர்-இ-ஹிந்த்-1956

சுகலதா ராவ் (Shukhalata Rao)(1886–1969) என்பவர் ஓர் இந்தியச் சமூக சேவகரும், கலைஞரும் குழந்தைகள் புத்தக எழுத்தாளரும் ஆவார். இவர் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்தார். இவர் உபேந்திரகிஷோர் ராய் சவுத்ரியின் மகளும், சுகுமார் ராயின் சகோதரியும் ஆவார். இவர் பெதுன் கல்லூரியில் படித்து, இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சுகலதா கட்டக்கைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்த் ராவை மணந்தார். கட்டாக்கிற்குக் குடிபெயர்ந்த பிறகு, சுகலதா சிசூ-ஓ-மாத்ரி மங்கல் கேந்திரோவை ('குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனுக்கான மையம்') நிறுவினார். இவர் ஒடிசா பெண் சக்தி சேவைச் சங்கத்தையும் நிறுவினார்.[1]

சுகலதா, அலோக் என்ற செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார்.[1] இவர் குழந்தைகள் கதைகள், விசித்திரக் கதைகள் எனப் பலவகையான கதைகளை எழுதியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

புத்தகங்கள்

[தொகு]
  • கல்பா-அர்-கல்பா
  • கால்பர் போய் (1912)
  • ஆரோ கல்பா (1916)
  • கோகா எலோ பெரியே (1916)
  • நதுன் பரா (1922)
  • சோனார் மயூர்
  • நதுன் சோரா (1952)
  • பிதேசி சோரா (1962)
  • நானன் தேஷர் ரூப்கதா
  • பாதர் ஆலோ
  • ஈசோபர் கோல்போ
  • லிவ்விங் லைட்சு
  • நிஜே போரா
  • பெகுலா

பெங்காலி நாடகம்

[தொகு]
  • அடார் முச்சிர் கோப்போ

விருதுகள்

[தொகு]

சுகலதா ராவ் தனது நிஜே போரா என்ற புத்தகத்திற்காக 1956-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு கைசர்-இ-ஹிந்த் விருதினை வழங்கியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Sarker, Sushanta (2012). "Rao, Shukhalata". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.