சுஜாதா | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுஜாதா மோகன் സുജാത മോഹന് |
பிற பெயர்கள் | இசைக்குயில் , இசை தேவதை |
பிறப்பு | மார்ச்சு 31, 1964[1][2] திருவனந்தபுரம், இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகி |
இசைத்துறையில் | 1974–இன்று வரை |
சுஜாதா மோகன் (Sujatha Mohan) (பிறப்பு: மார்ச்சு 31, 1964) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 20000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
சுஜாதா மோகன் மார்ச்சு 31, 1963-ஆம் ஆண்டு, இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார். இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை ஆவார். இவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார்.
1981-ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குச் சுவேதா மோகன் என ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார்.