சுதாகர் சதுர்வேதி | |
---|---|
ಸುಧಾಕರ್ ಚತುರ್ವೇದಿ | |
![]() 2008 இல் சுதாகர் சதுர்வேதி | |
தாய்மொழியில் பெயர் | ಸುಧಾಕರ್ ಚತುರ್ವೇದಿ |
பிறப்பு | சுதாகர் கிருஷ்ணா ராவ்[1] 20 ஏப்ரல் 1897 (claimed) பெங்களூர், மைசூர் அரசு, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி பெங்களூர், கருநாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது |
|
சுதாகர் சதுர்வேதி (Sudhakar Chaturvedi), 20 ஏப்ரல் 1897 இல் பிறந்ததாகக் கூறப்படுகிறது.[2][3] இவர் ஒரு இந்திய வேத அறிஞர், இந்தியவியலாளர், மற்றும் சூப்பர் சென்டெனேரியன் என்று கூறப்படுபவர். கூறப்பட்ட நாளில் இவருக்கு வயது 122 ஆண்டுகள், 254 நாட்கள் ஆகியிருந்தன. சில இந்திய செய்தித்தாள்கள் அவரை மிகவும் வயதான வாழும் இந்தியர் என்று தெரிவிக்கின்றன.[4][5]
சதுர்வேதி 1897 ஏப்ரல் 20 அன்று இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்ததாகக் கூறுகிறார் [4][6][7] (அல்லது கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கியாட்சந்திராவில் [8] ஒரு அறிக்கையின்படி).[9] ஒரு அறிக்கை 2011 இல், இவருக்கு 121 வயதாகக் கூறுகிறது. அந்த அறிக்கையில் இவரது பிறந்த ஆண்டு 1890 ஆக உள்ளது.[10]
சதுர்வேதிக்கு "சதுர்வேதி" என்ற தலைப்பு வழங்கப்பட்டது. அதாவது "நான்கு வேதங்களின் எசமானர்" என்று பொருள்படும்.[4][11] ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்ரியில் சுவாமி ஷ்ரதானந்தின் சீடரான இவர், வேத வச்சஸ்பதி பட்டம் பெற்றார் (இது முதுகலை பட்டத்திற்கு சமமானது).[6]
சதுர்வேதி மகாத்மா காந்தியின் சமகாலத்தவர் ஆவார். வட இந்தியாவில் ஒரு குருகுலத்தில் வேதங்களைப் படிக்கும் போது காந்தியை முதலில் சந்தித்தார். பின்னர், இவர் காந்திய முறைகளை தீவிரமாக பின்பற்றுபவராக ஆனார்.[12] 1919இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையை நேரில் கண்ட சாட்சியாக இருப்பது உட்பட இந்திய சுதந்திர இயக்கத்தின் பல நிகழ்வுகளுக்கு இவர் சாட்சியாக இருந்தார்.[6][11][13][14] காந்தி ஆணையிட்ட கடிதங்களை வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பியதால் அவர் காந்திஜியின் தபால்காரர் என்று அழைக்கப்பட்டார்.[7][15] காந்தி இவரை 'கர்நாடகி' என்று அழைத்தார்.[16] 1938 ஆம் ஆண்டில் காந்தியுடன் பயணம் செய்யும் போது இவர் தனது வலது கையின் பயன்பாட்டை இழந்தார். பின்னர், இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.[17] மேலும், சுதந்திர போராட்டத்தின் போது குறைந்தது 31 தடவைகள் கைது செய்யப்பட்டார்.[4][18] பெஷாவர் முதல் வேலூர் வரை, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்தார்.
பழைய மைசூர் மாநிலத்தில் இவருக்கு மந்திரி பதவியை சர்தார் வல்லபாய் படேல் வழங்கினார். அதை இவர் நிராகரித்தார்.[6] இவர் மாநிலத்தை ஒன்றிணைக்க பிரச்சாரம் செய்தார்.[19]
இவரது பிற்கால வாழ்க்கையில், இவர் ஆர்யா சமாஜத்தின் தயானந்த சரஸ்வதியைப் பின்பற்றுபவர் ஆனார்.[4] இவர் ஆர்யா மித்ரா [20] என்ற நபரை தனது மகனாக ஏற்றுக்கொண்டார். மேலும் இவருக்கு மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை:[6]
"எனது இளமைக்காலம் முழுவதும் சுதந்திர போராட்டத்திலேயே கழிந்தது. 1947இல், சுதந்திரம் கிடைத்தபோது எனக்கு 50 வயது தாண்டிவிட்டது. அதனால் யார் எனக்கு பெண் கொடுப்பார்கள்?" என்று கூறியுள்ளார்.
சதுர்வேதி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் முதல் ஆசிரியர் ஆவார்.[11][21][22] 2011 ல் ஊழலுக்கு எதிரான இந்தியா பிரச்சாரத்தில் பங்கேற்றார்.[17] இவர் இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஜெயநகரில் வசிக்கிறார்.[4][8] மற்றும் 2010 இல், இவர் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் வேலை செய்வதாகக் கூறினார்.[7] இதில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இவர் வேதங்களில் ஒரு மணி நேர சொற்பொழிவு செய்வதும் அடங்கும்.[20][23] இவர் அதிகாலை 3 மணிக்கு அல்லது 3:30 மணிக்கு எழுந்திருக்கிறார்,[15] இரவு 7 மணிக்குள் படுக்கைக்குச் செல்கிறார். "வேதங்களில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற்ங்கள், அதனால், மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது" என்று அவர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். இவர் கண்டிப்பான சைவ உணவை கடைப்பிடிக்கிறார். இவர் 300 வயது வரை வாழ விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.[10]
2003 ஆம் ஆண்டில் இந்தோலஜிக்கு அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது, மோதிலால் பனார்சிதாஸால் இவர் கௌரவிக்கப்பட்டார் .[24] கர்நாடக சாகித்யா அனுவாடா அகாடமி அவருக்கு 2007-08க்கான கௌரவ விருதை வழங்கியது.[25] 2009 ஆம் ஆண்டில் ஸ்ரீ காஷி சேஷா சாஸ்திரி அறக்கட்டளையால் அவருக்கு "சமூக பொருளாதார மேம்பாட்டு ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது.[14] 2010 ஆம் ஆண்டில் அவரது அல்மா மேட்டர் குருகுல் காங்ரி பல்கலைக்கழகத்தால் கௌரவிக்கப்பட்டார்.[26] 2010 ஆம் ஆண்டில் ஐ.டி.எல் அறக்கட்டளையால் ஒரு "லிவிங் லெஜண்ட்" விருது இவருக்கு வழங்கப்பட்டது, அங்கு அவர் கண்களை தானம் செய்வதாக உறுதியளித்தார்.[7][18][27] மார்ச் 2011 இல், ஐ.டி.எல் அறக்கட்டளையால் அவருக்கு சக்கர நாற்காலி பரிசளிக்கப்பட்டது. இது, லோகாயுக்தா சந்தோஷ் ஹெக்டே [11][13][15][28] நிதியுதவி அளித்து பெறப்பட்டதாகும். இவர், அதைப் பயன்படுத்தத் தொடங்கினார்.[17] 2010 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, அவரை கர்நாடக ஆளுநர் பாராட்டினார்.[29]
சுதாகர் சதுர்வேதி | |
---|---|
ಸುಧಾಕರ್ ಚತುರ್ವೇದಿ | |
![]() 2008 இல் சுதாகர் சதுர்வேதி | |
தாய்மொழியில் பெயர் | ಸುಧಾಕರ್ ಚತುರ್ವೇದಿ |
பிறப்பு | சுதாகர் கிருஷ்ணா ராவ்[1] 20 ஏப்ரல் 1897 (claimed) பெங்களூர், மைசூர் அரசு, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி பெங்களூர், கருநாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது |
|
சுதாகர் சதுர்வேதி (Sudhakar Chaturvedi), 20 ஏப்ரல் 1897 இல் பிறந்ததாகக் கூறப்படுகிறது.[2][3] இவர் ஒரு இந்திய வேத அறிஞர், இந்தியவியலாளர், மற்றும் சூப்பர் சென்டெனேரியன் என்று கூறப்படுபவர். கூறப்பட்ட நாளில் இவருக்கு வயது 122 ஆண்டுகள், 254 நாட்கள் ஆகியிருந்தன. சில இந்திய செய்தித்தாள்கள் அவரை மிகவும் வயதான வாழும் இந்தியர் என்று தெரிவிக்கின்றன.[4][5]
சதுர்வேதி 1897 ஏப்ரல் 20 அன்று இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்ததாகக் கூறுகிறார் [4][6][7] (அல்லது கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கியாட்சந்திராவில் [8] ஒரு அறிக்கையின்படி).[9] ஒரு அறிக்கை 2011 இல், இவருக்கு 121 வயதாகக் கூறுகிறது. அந்த அறிக்கையில் இவரது பிறந்த ஆண்டு 1890 ஆக உள்ளது.[10]
சதுர்வேதிக்கு "சதுர்வேதி" என்ற தலைப்பு வழங்கப்பட்டது. அதாவது "நான்கு வேதங்களின் எசமானர்" என்று பொருள்படும்.[4][11] ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்ரியில் சுவாமி ஷ்ரதானந்தின் சீடரான இவர், வேத வச்சஸ்பதி பட்டம் பெற்றார் (இது முதுகலை பட்டத்திற்கு சமமானது).[6]
சதுர்வேதி மகாத்மா காந்தியின் சமகாலத்தவர் ஆவார். வட இந்தியாவில் ஒரு குருகுலத்தில் வேதங்களைப் படிக்கும் போது காந்தியை முதலில் சந்தித்தார். பின்னர், இவர் காந்திய முறைகளை தீவிரமாக பின்பற்றுபவராக ஆனார்.[12] 1919இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையை நேரில் கண்ட சாட்சியாக இருப்பது உட்பட இந்திய சுதந்திர இயக்கத்தின் பல நிகழ்வுகளுக்கு இவர் சாட்சியாக இருந்தார்.[6][11][13][14] காந்தி ஆணையிட்ட கடிதங்களை வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பியதால் அவர் காந்திஜியின் தபால்காரர் என்று அழைக்கப்பட்டார்.[7][15] காந்தி இவரை 'கர்நாடகி' என்று அழைத்தார்.[16] 1938 ஆம் ஆண்டில் காந்தியுடன் பயணம் செய்யும் போது இவர் தனது வலது கையின் பயன்பாட்டை இழந்தார். பின்னர், இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.[17] மேலும், சுதந்திர போராட்டத்தின் போது குறைந்தது 31 தடவைகள் கைது செய்யப்பட்டார்.[4][18] பெஷாவர் முதல் வேலூர் வரை, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்தார்.
பழைய மைசூர் மாநிலத்தில் இவருக்கு மந்திரி பதவியை சர்தார் வல்லபாய் படேல் வழங்கினார். அதை இவர் நிராகரித்தார்.[6] இவர் மாநிலத்தை ஒன்றிணைக்க பிரச்சாரம் செய்தார்.[19]
இவரது பிற்கால வாழ்க்கையில், இவர் ஆர்யா சமாஜத்தின் தயானந்த சரஸ்வதியைப் பின்பற்றுபவர் ஆனார்.[4] இவர் ஆர்யா மித்ரா [20] என்ற நபரை தனது மகனாக ஏற்றுக்கொண்டார். மேலும் இவருக்கு மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை:[6]
"எனது இளமைக்காலம் முழுவதும் சுதந்திர போராட்டத்திலேயே கழிந்தது. 1947இல், சுதந்திரம் கிடைத்தபோது எனக்கு 50 வயது தாண்டிவிட்டது. அதனால் யார் எனக்கு பெண் கொடுப்பார்கள்?" என்று கூறியுள்ளார்.
சதுர்வேதி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் முதல் ஆசிரியர் ஆவார்.[11][21][22] 2011 ல் ஊழலுக்கு எதிரான இந்தியா பிரச்சாரத்தில் பங்கேற்றார்.[17] இவர் இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஜெயநகரில் வசிக்கிறார்.[4][8] மற்றும் 2010 இல், இவர் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் வேலை செய்வதாகக் கூறினார்.[7] இதில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இவர் வேதங்களில் ஒரு மணி நேர சொற்பொழிவு செய்வதும் அடங்கும்.[20][23] இவர் அதிகாலை 3 மணிக்கு அல்லது 3:30 மணிக்கு எழுந்திருக்கிறார்,[15] இரவு 7 மணிக்குள் படுக்கைக்குச் செல்கிறார். "வேதங்களில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற்ங்கள், அதனால், மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது" என்று அவர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். இவர் கண்டிப்பான சைவ உணவை கடைப்பிடிக்கிறார். இவர் 300 வயது வரை வாழ விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.[10]
2003 ஆம் ஆண்டில் இந்தோலஜிக்கு அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது, மோதிலால் பனார்சிதாஸால் இவர் கௌரவிக்கப்பட்டார் .[24] கர்நாடக சாகித்யா அனுவாடா அகாடமி அவருக்கு 2007-08க்கான கௌரவ விருதை வழங்கியது.[25] 2009 ஆம் ஆண்டில் ஸ்ரீ காஷி சேஷா சாஸ்திரி அறக்கட்டளையால் அவருக்கு "சமூக பொருளாதார மேம்பாட்டு ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது.[14] 2010 ஆம் ஆண்டில் அவரது அல்மா மேட்டர் குருகுல் காங்ரி பல்கலைக்கழகத்தால் கௌரவிக்கப்பட்டார்.[26] 2010 ஆம் ஆண்டில் ஐ.டி.எல் அறக்கட்டளையால் ஒரு "லிவிங் லெஜண்ட்" விருது இவருக்கு வழங்கப்பட்டது, அங்கு அவர் கண்களை தானம் செய்வதாக உறுதியளித்தார்.[7][18][27] மார்ச் 2011 இல், ஐ.டி.எல் அறக்கட்டளையால் அவருக்கு சக்கர நாற்காலி பரிசளிக்கப்பட்டது. இது, லோகாயுக்தா சந்தோஷ் ஹெக்டே [11][13][15][28] நிதியுதவி அளித்து பெறப்பட்டதாகும். இவர், அதைப் பயன்படுத்தத் தொடங்கினார்.[17] 2010 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, அவரை கர்நாடக ஆளுநர் பாராட்டினார்.[29]