சுமி கியாட்சே அருவி | |
---|---|
அருணாசலப் பிரதேசத்தில் அருவியின் அமைவிடம் | |
![]() | |
அமைவிடம் | தவாங், அருணாசலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 27°46′34″N 91°58′58″E / 27.7762°N 91.9829°E |
சுமி கியாட்சே அருவி (Chumi Gyatse Falls)[a] அல்லது சுமிக் கியாட்சே) என்பது இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் மாவட்டத்தில், சீனாவின் திபெத் பகுதியின் எல்லைக்கு அருகில் உள்ள அருவிகளின் தொகுப்பாகும்.[2][3] உள்ளூர் பௌத்த பாரம்பரியத்தின் படி, மலைகளுக்கு இடையிலிருந்து தோன்றும் 108 புனித நீர் அருவிகள் திபெத்திய பௌத்த அறிஞர் பத்மசாம்பவரின் ஆசீர்வாதத்தை குறிக்கிறது.[4] சுமி கியாட்சே அருவியானது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நடைமுறை எல்லையான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. ஒரு கணக்கின்படி வெறும் 250 மீட்டர் தொலைவில் உள்ளது.[5][b]
சுமி கியாட்சே அருவி யாங்சே [c] என்ற பகுதியில் உள்ளது. அங்கு திபெத்திலிருந்து சோனா சூ ஆறு இந்தியாவின் தவாங் மாவட்டத்தில் பாய்கிறது. அவை கிழக்கு-மேற்கு மலைத்தொடரால் உருவாக்கப்பட்ட உயரமான பீடபூமியின் ("யாங்சே பீடபூமி") குன்றின் முகத்தில் உள்ளன. அதன் நீர்நிலையானது மெக்மோகன் கோட்டின்படி இந்தியா-சீனா எல்லையாக செயல்படுகிறது.[7]
வடக்கே சில நூறு மீட்டர்கள் அருகே அமைந்துள்ள, தோம்சாங் (அல்லது தோங்சாங்) (27°46′49″N 91°58′37″E), என்ற இடம் குரு பத்மசாம்பவருடன் தொடர்புடைய பௌத்த தியான தலமாகும்.[8] வரலாற்றுக் காலத்தில் தோம்சாங் ஒரு முக்கியமான இடமாக இருந்தது. அதனால் அதன் கீழ் உள்ள ஆறு மற்றும் பள்ளத்தாக்குக்கு "தோம்சாங்ரங்" என்று பெயர் கொடுக்கப்பட்டது.[9][10] சீனா தொடர்ந்து "தோம்சாங் ஆறு" மற்றும் "தோங்சாங் அருவி" என்ற பெயர்களைப் பயன்படுத்துகிறது.[3][11]
அருவிகளுக்கு தெற்கே, யாங்சே பீடபூமியில் இருந்து எழும் நியுசரோங் எனப்படும் மற்றொரு ஆறு சோனா சூ என்ற ஆற்றுடன் இணைகிறது. சேச்சு என்று அழைக்கப்படும் ஒரு கிராமம், யாங்ட்சே பிராந்தியத்தின் முனையத்தைக் குறிக்கும் வகையில், இரு ஆறுகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[12]
2018 ஆம் ஆண்டு தொடக்கம் அருணாச்சல பிரதேச மாநிலம் அருவியை சுற்றுலா தளமாக மேம்படுத்தி வருகிறது. [13] தவாங் நகரத்திலிருந்து எளிதாகப் பயணிக்க புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. [13] ஜூலை 2020 இல், பத்மசாம்பவர் சிலையுடன் கூடிய கற்றல் மையம் ஒன்று திறக்கப்பட்டது. திபெத்திய யாத்ரீகர்கள் அருவியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. [13]