செம்போல் நகரம் (பண்டார் ஜெம்போல்) | |
---|---|
Bandar Seri Jempol | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°54′41.71″N 102°23′28.6″E / 2.9115861°N 102.391278°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | செம்போல் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 72120[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06458 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
செம்போல் நகரம் அல்லது பண்டார் ஜெம்போல் (மலாய்; ஆங்கிலம்: Bandar Seri Jempol; சீனம்: 斯里仁保镇) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம். இந்த நகரம் 1980-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும்.[2]
இந்த நகரத்தின் பழைய பெயர் செர்த்திங் (Serting). அதிகாரப்பூர்வமாக பண்டார் ஜெம்போல் என்று இந்த நகரம் அழைக்கப்பட்டாலும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் செர்த்திங் என்றே அழைக்கின்றனர்.
செம்போல் மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்களில் செம்போல் நகரமும் ஒன்றாகும். மற்றொரு முக்கியமான நகரம் பகாவ்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகரம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டத்தின் செம்போல் நகரச் சுற்றுவட்டாரப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 176 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்: [3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD6002 | ஆயர் ஈத்தாம் தோட்டம் | SJK(T) Ladang Air Hitam[4][5] | ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 91 | 14 |
NBD6003 | கெடிஸ் தோட்டம் | SJK(T/Te) Ladang Geddes | கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 85 | 14 |
{{cite web}}
: |first1=
has generic name (help)