செலினா ஹொசைன் | |
---|---|
সেলিনা হোসেন | |
செலினா ஹொசைன் - 2014 இல் | |
வங்காள அகாதமியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 3, 2022 | |
முன்னையவர் | ரஃபிகுல் இஸ்லாம் |
வங்காளதேச ஷிஷு அகாதமி தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 23, 2014 – 2018 | |
முன்னையவர் | ஷேக் அப்துல் அஹெட்[1] |
பின்னவர் | லக்கி இனம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூன் 1947 ராஜசாகி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
தேசியம் | பங்களாதேஷி |
கல்வி | எம்.ஏ. |
முன்னாள் கல்லூரி | ராஜ்சாகி பல்கலைக்கழகம் |
வேலை | நாவலாசிரியர், நிர்வாகி |
விருதுகள் | full list |
செலினா ஹொசைன் ( Selina Hossain ) (பிறப்பு 14 ஜூன் 1947) வங்காளதேசத்தைச் சேர்ந்த புதின ஆசிரியராவார். பிப்ரவரி 2022 முதல் பங்களா அகாதமியின் தற்போதைய தலைவராக இருக்கிறார். [2] [3] [4] ஹாங்கோர் நொடி கிரெனேட் (1976) மற்றும் போகா மகோரர் கோர் போஷோடி (1996) ஆகியவை இவரது முக்கிய படைப்புகள் ஆகும். 1980 இல் பங்களா அகாதமி இலக்கிய விருது, 2009 இல் எகுஷே பதக் மற்றும் 2018 இல் சுதந்திர தின விருது போன்ற அனைத்து முக்கிய தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது புதினங்கள் மற்றும் சிறுகதைகள் ஆங்கிலம், உருசியன், பிரெஞ்சு, ஜப்பானியம், கொரியன், பின்னிஷ் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [5] இவர் 2014 முதல் 2018 [6] வரை பங்களாதேஷ் ஷிஷு அகாதமியின் தலைவராக பணியாற்றினார்.
ஹொசைன் ஏ.கே. மோஷாரஃப் ஹொசைன் மற்றும் மரியமெனெசா பாகுல் ஆகியோருக்கு பிறந்தார். [7] இவர், 1968 இல் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் பெங்காலி மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார்.
1994-95 இல், செலினா ஹொசைன் தனது சந்தியா காயத்ரி நாவலுக்காக ஃபோர்டு அறக்கட்டளையின் உதவித்தொகையைப் பெற்றார். [8]
இவர், பங்களா அகாதமியின் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார். இவர் பங்களாதேஷின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும், யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். [9] 2014 இல், இவர் பங்களாதேஷ் ஷிஷு அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
செலினா ஹொசைனின் பூமி ஓ குசும் என்ற நாவல் வங்காள இலக்கியத்தில் என்கிளேவ் பிரச்சினையைத் தீர்க்கும் முதல் படைப்பாகும்.