சையத் முகமது சாதுல்லா | |
---|---|
ছাৰ ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ | |
![]() புகைப்படம், ஆண்டு 1947 | |
அசாம் மாகாணத்தின் பிரதம அமைச்சர் | |
பதவியில் 1 ஏப்ரல் 1937 – 11 பிப்ரவரி 1946 | |
முன்னையவர் | புதிய பணியிடம் |
பின்னவர் | கோபிநாத் பர்தலை |
உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் & இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு | |
பதவியில் 9 டிசம்பர் 1946 – 24 சனவரி 1950 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குவாகாத்தி | 21 மே 1885
இறப்பு | 8 சனவரி 1955 | (அகவை 69)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அசாம் சமவெளி கட்சி (அசாம் ஐக்கிய முஸ்லீம் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கூட்டணி, பின்னர் அகில இந்திய முசுலிம் லீக்குடன் கூட்டணி) |
முன்னாள் மாணவர் | காட்டன் கல்லூரி, குவாகாத்தி மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
பணி | அசாம் மாகாணத்தின் முதல் பிரதம அமைச்சர் |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
விருதுகள் | ஆர்டர் ஆஃப் இந்தியப் பேரரசு (1946) |
சர் சையத் முகமது சாதுல்லா (Syed Muhammad Saadulla) (21 மே 1885 – 8 சனவரி 1955) பிரித்தானிய இந்தியாவின் அசாம் மாகாணத்தின் முதல் பிரதம அமைச்சராக 1937 முதல் 1946 முடிய பணியாற்றியவர். மேலும் வழக்கறிஞராக இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் மற்றும் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு உறுப்பினராக பணியாற்றியவர். இவர் அசாம் சமவெளி கட்சியின் தலைவராக செயல்பட்டு, அசாம் ஐக்கிய முஸ்லீம் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்தவர். பின்னர் அகில இந்திய முசுலிம் லீக்குடன் கூட்டணி வைத்தார்.