![]() ஜவகர் கோளரங்கம் முகப்பு | |
![]() | |
நிறுவப்பட்டது | 1975 |
---|---|
அமைவிடம் | பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூற்று | 25°27′32″N 81°51′37″E / 25.45890°N 81.86024°E |
வகை | அறிவியல் காட்சியகம் |
உரிமையாளர் | ஜவகர்லால் நேரு நினைவு நிதி |
ஜவகர் கோளரங்கம் (Jawahar Planetarium) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது.[1] இது 1979-இல் கட்டப்பட்டது. இக்கோளரங்கம் நேரு-காந்தி குடும்பத்தின் முன்னாள் வசிப்பிடமான ஆனந்த பவனுக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனந்த பவன் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இது 'ஜவகர்லால் நேரு நினைவு நிதி' (1964-இல் நிறுவப்பட்டது) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் உள்ளது.[2]
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் முதல் பிரதமரின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று, ஜவகர்லால் நேரு நினைவு நிதியத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்படும் மதிப்புமிக்க 'ஜவகர்லால் நேரு நினைவு விரிவுரை' கோளரங்கத்தில் நடத்தப்படுகிறது.