ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி (Jogesh Chandra Chatterjee) (1895-1969) இவர் ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், புரட்சிக்காரர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார் .
இவர் அனுசீலன் சமித்தியின் உறுப்பினரானார். இந்துசுத்தான் குடியரசுக் கழகத்தின் (1924 இல்) நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர் பின்னர் இதை இந்துசுத்தான் சோசலிச குடியரசுக் கழகமாக மாறினார். [1] புரட்சிகர நடவடிக்கைகளுக்காக இவர் பல முறை கைது செய்யப்பட்டார். 1926 இல் கக்கோரி சதி வழக்கில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் இந்திய புரட்சியாளர்கள் மாநாட்டில், சுதந்திரத்தைத் தேடுவதில் (சுயசரிதை) என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார்.
1937 ஆம் ஆண்டில், இவர் காங்கிரசு சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். ஆனால் விரைவிலேயே அதிவிடு வெளியே வந்து 1940 இல் புரட்சிகர சோசலிசக் கட்சி என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை உருவாக்கினார். அதில் இவர் 1940 முதல் 1953 வரை பொதுச் செயலாளராக இருந்தார். இவர் 1949 முதல் 1953 வரை ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசி ( புரட்சிகர சோசலிசக் கட்சியின் தொழிற்சங்க பிரிவு) துணைத் தலைவராகவும், 1949 ஆம் ஆண்டுக்கு மட்டுமே ஐக்கிய சோசலிச அமைப்பாகவும் இருந்தார். [2]
எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் காங்கிரசுக்குத் திரும்பி, 1956 இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினரானார். 1969 இல் தான் இறக்கும் வரை அதன் உறுப்பினராக இருந்தார்.[3]