இராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ராமண்ணா என்று திரையுலகில் இவரை செல்லமாக அழைத்தனர். இவர் தந்தை ராதாகிருஷ்ணன் வயிற்று வலியால் இவரது சிறுவயதிலே இறந்துவிட இவர் தாயார் ரங்கநாயகி அவர்கள் அரவனைப்பில் இவரும் இவர் மூத்த சகோதரியான ராஜகுமாரியும் வளர்ந்து வந்தனர். இவர் அன்றைய நாட்களிலே பத்தாம் வகுப்பு வரை முடித்துவிட்டு தனது சகோதரியான ராஜகுமாரி அப்போது திரையுலகில் நடிப்பதால் இவருக்கும் திரையுலகில் எதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசையோடு தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து இரயில் ஏறி சென்னைக்கு வந்தார்.
பின்பு ராமண்ணா சிட்டி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக Sound Engineer ஆக தனது வாழ்க்கையை திரையுலகில் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார்.
தனது சகோதரி டி. ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ஆர். ஆர். பிக்சர்சு என பெயர் சூட்டினார்.
மேலும் இவரது தயாரித்த திரைப்படங்களான மணப்பந்தல், துலாபாரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
தமது சொந்த திரைப்பட நிறுவனமான ஆர். ஆர்.பிக்சர்ஸ், விநாயகா பிக்சர்ஸ், கணேஷ் கிரியேஷன்ஸ் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த இயக்கிய திரைப்படங்களில் பெரும்பாலானவை மாறுபட்ட கதைகளம் கொண்ட சிறந்த வெற்றி திரைப்படங்களாகும்.
மேலும் இவர் திரைப்படங்களில் கதை வசனம் போன்றவைகளுக்கு அப்போது பிரபலமாக இருந்த கதாசிரியர்களான விந்தன், கருணாநிதி, துறையூர் மூர்த்தி, சக்தி கிருஷ்ணசாமி, டி. என். பாலு ஆகியோர் இவர் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய ஆஸ்த்தான கதாசிரியர்கள் ஆவார்கள்.