டி. கே. இராமமூர்த்தி | |
---|---|
![]() T. K. Ramamoorthy | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி |
பிறப்பு | 15 மே 1922 |
பிறப்பிடம் | திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம் |
இறப்பு | 17 ஏப்ரல் 2013 | (அகவை 90)
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை இசைக்கருவி ஆர்மோனியம் வயலின் |
இசைத்துறையில் | 1950கள்-1970கள் |
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி (Trichirappalli Krishnasamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளரும் வயலின் கலைஞரும் ஆவார். இவரும் எம். எஸ். விஸ்வநாதனும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1950/1960 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
விரிவான தரவுகளுக்கு -
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் நாள் காலமானார்.[1]