டூரோ (Tooro / / tɔːroʊ / ) / Rutooro ( / ruːˈtɔːroʊ / , Orutooro ,IPA: [oɾutóːɾo] ) என்பது முக்கியமாக மேற்கு உகாண்டாவில் உள்ள டூரோ இராச்சியத்தைச் சேர்ந்த டூரோ மக்களால் (அபதூரோ ) பேசப்படும் ஒரு பாண்டு மொழியாகும் . டூரோ ஒரு மொழியாக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. அவை, கபரோல் மாவட்டம், கியென்ஜோஜோ மாவட்டம் மற்றும் கியேகெக்வா மாவட்டம் ஆகியவை ஆகும். பாண்டு மொழிகளில் டூரோ தனித்துவமானது, ஏனெனில் அது இலக்கணம் மற்றும் அதன் கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட தொனியைக் கொண்டிருக்கவில்லை. [1] இது ரன்யோரோவுடன் மிக நெருங்கிய தொடர்புடையது.
இம்மொழி 5 குறுகிய உயிரெழுத்துக்களையும் 5 தொடர்புடைய நீண்ட உயிரெழுத்துக்களையும் கொண்டுள்ளது. இது 3 ஈருயிர் ஒலிகளையும் கொண்டுள்ளது.