ஒரு பணியிட அமைப்பில், தகுதிகாண் பருவம் (அல்லது தகுதிகாண் காலம் ) என்பது ஒரு நிறுவனம், வணிகம் அல்லது அமைப்பின் புதிய பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் நிலை ஆகும். இந்த நிலை ஒரு மேற்பார்வையாளர், பயிற்சி அதிகாரி அல்லது மேலாளருக்கு புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளரின் முன்னேற்றம் மற்றும் திறன்களை மதிப்பிடவும், பொருத்தமான பணிகளைத் தீர்மானிக்கவும், பணியாளரின் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் சக பணியாளர்கள், மேற்பார்வையாளர்களுடனான தொடர்புகள் போன்ற பிற அம்சங்களைக் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.
நிறுவனங்கள் மற்றும் வணிகங்களில் தகுதிகாண் பருவம் என்பது பெரும்பான்மையாக பயன்பாட்டில் உள்ளது, ஆனால் இதே போன்ற திட்டங்கள் தேவாலயங்கள் அல்லது சங்கங்கள் போன்ற பிற நிறுவனங்களிலும் புதியதாக நியமனம் ஆகும் ஒருவர் முழு அளவிலான உறுப்பினர்களாக மாறுவதற்கு முன்பு அனுபவத்தைப் பெற கடைபிடிக்கப்படுகிறது. [1] இதேபோன்ற நடைமுறைகளை அவசரகால சேவைகளில் காணலாம், இது களப் பயிற்சித் திட்டம் (நடப்புக்காலம் என்றும் அழைக்கப்படுகிறது).
தமிழ்நாடு அரசுப் பணியில் நேரடி நியமனம் பெறும் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய வேண்டும். [2] இத்தகைய காலத்தில் பயிற்சிகளில் கலந்துகொண்டால் அவையும் தகுதிகாண் பருவ காலத்திற்குள் அடங்கும்.