தமன் சிங் என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர். இவர் இந்திய முன்னாள் பிரதம மந்திரி (தலைமையமைச்சர்) மன்மோகன் சிங்கின் இரண்டாம் மகள் ஆவார்[1]. தில்லி சுடிபன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
'ஸ்டிரிக்லி பெர்சனல்-மன்மோகன் சிங் அண்ட் குர்சரண்' (Strictly Personal—Manmohan & Gursharan) என்னும் பெயரில் தம் தந்தை மன்மோகன் சிங்கின் வரலாற்றை எழுதியுள்ளார். மன்மோகன் சிங் அரசியலுக்குப் பொருத்தமற்றவர் என்றும் சூழ்ச்சியும் தந்திரமும் அவருக்குக் கை வரவில்லை என்றும் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.