தமேசோ மோரி (森 為三, Mori Tamezō), (1884-1962) என்பவர் சப்பானிய இயற்கை ஆர்வலர் (1910–1945) ஆவார். இவர் 1909 முதல் சியோலில் உள்ள கெய்ஜோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் ஆயத்தப் பள்ளியில் கற்பித்தார். இவரை 1945-ல் அமெரிக்கப் படைகள் வெளியேற்றியது. மீனியல் நிபுணரான இவர் கொரியத் தீபகற்பம் மற்றும் மஞ்சூரியாவின் விலங்குகள் பற்றிய பல படைப்புகளை வெளியிட்டார். இவற்றில் சில, கொரியாவின் மீன்களின் பட்டியல் ஆகும். கொரியாவிலிருந்து 1934ஆம் ஆண்டு வண்ணப் பட்டாம்பூச்சிகள் போன்றவை குறித்த இவரது ஆய்வுப் பணிகள் இன்னும் அச்சில் உள்ளன.[1][2]