குழு | தொன்மக் கதைகளில் தோன்றும் உயிரினம் |
---|---|
உப குழு | கலப்பின மிருகம் |
நாடு | பிலிப்பீன்சு |
வாழ்விடம் | மழைக்காடுகள் |
திக்பலாங் (Tikbalang) ( திக்பாலங், திக்பாலன், அல்லது வேர்ஹார்ஸ் ) என்பது பிலிப்பீன்சின் மலைகளிலும் மழைக்காடுகளிலும் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் பிலிப்பைன் நாட்டுப்புறக் கதைகளில் தோன்றும் ஒரு உயிரினமாகும்.[1] இது ஒரு உயரமான, எலும்புகள் கொண்ட மனித உருவம் கொண்ட (அரை மனிதம் அரை குதிரை) ஒரு குதிரையின் தலை மற்றும் குளம்புகள் மற்றும் அளவில் மாறுபாடு கொண்ட நீண்ட மூட்டுகளுடன், அது அமரும்போது அதன் முழங்கால்கள் அதன் தலைக்கு மேலே அடையும் அளவிற்கு உள்ள ஒரு உயிரினமாகும்.[2] சில பதிப்புகளில், இது நரகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட கலைந்த கருவின் மாற்றமாகக் கூறப்படுகிறது.[3]
குதிரைகள் பிலிப்பைன்சைப் பூர்வீகமாகக் கொண்டவை அல்ல, மேலும் எசுபானியர்களின் வருகைக்குப் பிறகு மட்டுமே தீவுக்கூட்டத்திற்கு இவை அறிமுகப்படுத்தப்பட்டன. திக்பலாங் தொன்மம் ஏற்கனவே காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காலனித்துவ காலத்தில், நாட்டில் குதிரைகள் மிகவும் பரவலாக இருந்தபோது அதன் குதிரை போன்ற தோற்றம் பற்றிய கதை பின்னர் அதிகமாக வளர்ந்தது. [4][5]
திக்பலாங்கைக் குறிப்பிடும் ஆரம்பக்கால எழுதப்பட்ட கணக்குகள் குதிரை அல்லது விலங்குகளின் உருவ அமைப்பைக் குறிப்பிடவில்லை. அந்த எழுதப்பட்ட கணக்குகளில் எசுப்பானியத் துறவி ஜுவான் டி பிளாசென்சியாவின் கஸ்டம்ஸ் ஆஃப் த தகலாக்ஸ் (1589) என்ற நூலும் அடங்கும். இதில் திக்பலாங்கானது 'மல்டோ' மற்றும் 'பிபிட்' ஆகிய சொற்களுடன் தொடர்புடைய காடுகளின் பேய்கள் மற்றும் ஆவிகள் என விவரிக்கப்பட்டது. (சில உள்ளீடுகள் ஆரம்பக்கால எசுப்பானிய அகராதிகளில் அவற்றை 'பேன்டஸ்மா டி மான்டெஸ்' அதாவது 'மலைகள்/காடுகளின் மாயங்கள்' என்று விவரித்தன. அவற்றை இயற்கை ஆவிகள் என்று வலுவாகக் கூறின.
மற்றொரு முன்மொழியப்பட்ட கோட்பாடு குறைவாக இருந்தாலும், திக்பலாங்கின் குதிரை போன்ற தோற்றம், இந்துக் கடவுளான ஹயக்ரீவரின் உருவத்தால் தாக்கம் கொண்டிருக்கலாம். ஏனெனில் பிலிப்பைன்சின் முந்தைய காலனித்துவக் காலத்தில் இந்து மதம் பின்பற்றப்பட்ட மதங்களில் ஒன்றாகும். [6]
திக்பலாங்குகள் பயணிகளைப் பயமுறுத்துகிறது. அவர்களை வழிதவறச் செய்கிறது மற்றும் அவர்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அல்லது திரும்பினாலும் தன்னிச்சையான பாதையில் திரும்பச் செய்வது போன்ற தந்திரங்களைச் செய்கிறது. ஒருவரின் சட்டையைத் தலைகீழாக அணிவதன் மூலம் குதிரையின் பயமுறுத்தலிருந்து தப்பிக்கலாம் என நம்பினர். மேலும், திக்பலாங்கை புண்படுத்தவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது என்பதற்காகக் காடுகளில் இருக்கும்போது அதிகச் சத்தம் எழுப்பாமல் கடந்து செல்லச் சத்தமாக அனுமதி கேட்பதும் உண்டு. "திக்பலாங்" என்பது ஒரு பேய், இது பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறது, மேலும் சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட தனக்கு விருப்பமான நபரையும் இதேபோன்ற வடிவத்தைத் தருகிறது. பிலிப்பீன்சின் ரிசால் மாகாணத்தின் தகலாகு மக்களிடையே பிரபலமான ஒரு மூடநம்பிக்கை என்னவென்றால், திக்பலாங்குகள் அடிப்படை இராச்சியங்களின் பாதுகாவலர்களாக நம்புகின்றனர். அவர்கள் வழக்கமாகப் பெரிய மரங்களின் அடிவாரத்தில் நின்று தங்கள் ராச்சியத்தின் எல்லையில் வீரியம் மிக்க எவரையும் எதிர்ப்பார்கள்.
சில பதிப்புகளில், திக்பலாங் தன்னை மனித வடிவமாக மாற்றிக்கொள்வதாகவும் அல்லது மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாததாக மாறுவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் பயணிகளை வழிதவறச் செய்ய விரும்புகிறார்கள். [7]
ஒரு கணக்கின்படி, ஒரு திக்பலாங்கானது கூர்மையான முதுகெலும்புகளைக் கொண்ட ஒரு உடலைக் கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தடிமனானவை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த முதுகுத்தண்டுகளில் ஒன்றைப் பெறும் ஒருவர், திக்பலாங்கைத் தனது வேலைக்காரனாக வைத்துக் கொள்ளலாம். மேலும், அவற்றை ஒரு தாயத்து போலப் பயன்படுத்தலாம். [3]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)[8]{{cite book}}
: Empty citation (help)