குறிக்கோளுரை | வினையே உயிர் |
---|---|
வகை | அரசு உதவிபெற்றது |
உருவாக்கம் | 1957 |
முதல்வர் | முனைவர். வி. அபய்குமார் |
அமைவிடம் | , , |
வளாகம் | 143 acres |
இணையதளம் | http://tce.edu |
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி புதுடெல்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதியுடன் அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை உடன் இணைக்கப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் மேலாண்மையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். சர்வதேச தரச் சான்றிதழ் (ISO 9001:2000) பெற்றுள்ள இக்கல்லூரி, மறைந்த கருமுத்து தியாகராசன் செட்டியாரால் மதுரையில் நிறுவப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு மத்திய, மாநில அரசு மானியங்களுடன் கல்லூரி மேலாண்மையும் நிதியுதவி செய்துள்ளது. 1987ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு தன்னாட்சி உரிமம் வழங்கப்பட்டது.[1][2][3]
மதுரை மாநகரிலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான நிலங்களுக்கும், திருப்பரங்குன்றம் மலைக் குன்றுகளுக்கும் இடையில் உள்ள வளாகத்தில், இக்கல்லூரிக்கான கட்டிடங்கள் அமைந்துள்ளன.
தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மற்றும் அறிவியலில் ஒன்பது பட்டப் படிப்புப் பாடங்களும், பதினோரு பட்ட மேற்படிப்புப் பாடங்களும் நடத்தப்படுகின்றன.
தவிர, கட்டிட வடிவமைப்புத் துறையில், இளநிலைப் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது.
2007-2008 ஆம் ஆண்டு, இக்கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் வகையில், பொன் விழா ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.