திரிபுவனாதித்யன்

திரிபுவனாதித்யன்
கெமர் பேரரசின் அரசன்
ஆட்சிக்காலம்1167–1177
முன்னையவர்இரண்டாம் யசோவர்மன்
பின்னையவர்ஏழாம் செயவர்மன்
இறப்பு1177
இராணுவ சேவை
பற்றிணைப்புகெமர் பேரரசு
போர்கள்/யுத்தங்கள்
  • கெமர்–சாம் போர்கள்
    • தோன்லே சாப் போர்

திரிபுவனாதித்யன் (Tribhuvanāditya) 1166 முதல் 1177 வரை கெமர் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். 1165 ஆம் ஆண்டில் இரண்டாம் யசோவர்மனைக் கொன்ற பிறகு கம்போடியாவின் அரியணைக்கு வந்தார். இவர் ஒரு ஏகாதிபத்திய தேர்வு முறை மூலம் நியமிக்கப்பட்டவராவார். யசோவர்மனின் விசுவாசமான ஆதரவாளர்களால் ஏற்பட்ட பல கிளர்ச்சிகளை அடக்கினார். ஆனால் மூன்றாம் செய இந்திரவர்மனின் கீழ் அண்டை நாடான சம்பா பேரரசின் படைகள் இவரது தலைநகரான அங்கோர் மீது படையெடுத்து கைப்பற்றும் வரை அரியணையையில் இருக்க முடிந்தது. பின்னர் மூன்றாம் செய இந்திரவர்மனும் கொல்லப்பட்டார்.[1] [2]:163

1177 இல் நான்காம் செய இந்திரவர்மன் தலைமையிலான சாம் படையெடுப்பு, கெமர் தலைநகரைக் கொள்ளையடித்தது.[3]:78–79 [2]:164[4]:120

சான்றுகள்

[தொகு]
  1. Matthew Bennett (1998), The Hutchinson Dictionary of Ancient & Medieval Warfare. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-116-1. Page 166. (google book)
  2. 2.0 2.1 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  3. Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9747534991
  4. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847