திருமலை திருப்பதி தேவசுதானம் என்பது திருப்பதி வெங்கடாசலபதி கோயிலினை நிருவாகம் செய்கின்ற அமைப்பாகும். இது ஆந்திர மாநிலத்தில் திருமலை பகுதியில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு திருப்பதி கோயிலின் சேவைகள், தரிசனங்கள், சேவை கட்டணம் நிர்ணயித்தல், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகள் போன்றவற்றினை செய்கின்றன.
1932 ஆம் ஆண்டு மதராசு அரசாங்கத்தால் திருமலை திருப்பதி தேவசுதானம் அமைப்பு உருவாக்கப்பட்டது.