திருவெறும்பூர் | |
---|---|
மாநகர் புறநகர் | |
திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°47′06.4″N 78°46′30.0″E / 10.785111°N 78.775000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 119 m (390 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 16,835 |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-81, TN-45 (பழைய எண்) |
திருவெறும்பூர் (Thiruverumbur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி அருளிலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது 2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கபட்டது.[1] இது திருஎறும்பூர் என்பது திரிந்து திருவெறும்பூர் என மாறியது. அதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் புராண பெயர் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருவெறும்பூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால், மைசூர், மயிலாடுதுறை, ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் உள்ளன.