திலன் மன்ஜித் விஜசிங்க(Thilan Manjith Wijesinghe) இலங்கை நிதியாளர், தொழில்முனைவோர், முன்னாள் துடுப்பாட்ட வீரர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார்.[1][2][3][4] இவர் தற்போது இலங்கையின் நிதி அமைச்சகத்தின் பொது தனியார் கூட்டாண்மை பிரிவின் தலைவர் மற்றும் செயல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்,[5] இவர் இலங்கை முதலீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.[1][2][3][4]
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
திலன் தனது இரண்டாம் நிலை கல்வியை கொழும்பின் ஆனந்த கல்லூரியில் பயின்றார், பின்னர் அமெரிக்காவில் தனது பல்கலைக்கழக படிப்பைத் தொடர்ந்தார், 1984 ஆம் ஆண்டில் ஃபிரெடோனியாவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் மூன்று இளங்கலை பட்டங்களைப் பெற்றார், கார்னெல் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
அமெரிக்காவில் தனது படிப்புகள் முடிந்தபின் 1985 ஆம் ஆண்டில் இலங்கைக்குத் திரும்பிய திலன், கொழும்பின் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸில் மூலோபாயம் மற்றும் சந்தை ஆராய்ச்சி ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற மூத்த மேலாண்மை ஆலோசகராக செயல்பட்டார். பின்னர் இவர் 1989 இல் சம்பத் வங்கியில் வணிக திட்டமிடல் தலைவராக சேர்ந்தார்.[3][4]
ஜனவரி 1992 இல், ஆசியா கேபிடல் லிமிடெட் நிறுவனத்தை நிறுவி தனது தொழில் முனைவோர் தொழில் மீதான ஆர்வத்தை நடைமுறைப்படுத்தினார். இது இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியாக மாறியது. அவரது பதவிக் காலத்தில், துவக்கத்தில் 25,000 அமெரிக்க டாலர்களில் இருந்த ஆசியா மூலதனம் ஆகஸ்ட் 1994 க்குள் 60 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மூலதனத்துடன் ஒரு நிறுவனமாக வளர்ந்தது, இது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் 10 நிறுவனங்களில் இடம் பிடித்தது. 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் சந்தை பங்கின் அடிப்படையில் இந்நிறுவனம் இலங்கையின் சிறந்த பங்கு தரகராக இருந்தது மற்றும் பல முக்கிய நிறுவன நிதி பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாகவும் இருந்தது.[3][4]
முதலீட்டு வங்கியாளராக திலனின் வெற்றி அரசியல் தலைமையின் கவனத்தை ஈர்த்தது, 1995 செப்டம்பரில், அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவால் ஒரு சட்டரீதியான முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவர் மற்றும் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு அழைக்கப்பட்டார். வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் தனியார் உள்ளூர் மூலதனத்தை பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகளில் திரட்டுவதற்கும் வசதி செய்வதற்கும் ஜனாதிபதி ஆணையின் கீழ் நேரடியாக அந்த அமைப்பு செயல்படுகிறது.
தனது 35ஆம் வயதில் அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் பொறுப்பு பெற்றவரும் அதிக ஆண்டுகள் பணியாற்றியவர் எனும் பெருமை பெற்றார். அந்த அமைப்பின் தலைவராக இவர் ஐந்து ஆண்டுகள் பணியில் இருந்தார். அந்த அமைப்பின் தலைவராக இருந்தபோதும், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகள், வீட்டுவசதி மேம்பாடு, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னோடி தனியார்மயமாக்கல் மற்றும் முதலீட்டு பரிவர்த்தனைகள் உட்பட பல துறைகளில் முன்னேற்றங்களில பங்கு கொண்டுள்ளார். அவரது பதவிக் காலத்தில், BOI 1999 இல் அதிகமாக வெளிநாட்டின் நேரடி முதலீட்டை ஈர்த்தது மற்றும் அதன் உள்கட்டமைப்பு முதலீட்டு வரவு செலவுத் திட்டத்தை 10 மடங்கு அதிகரித்தது.[3][4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)