தீசுதா செதால்வத் | |
---|---|
தீசுதா செதால்வத் 2015 | |
பிறப்பு | 9 பெப்ரவரி 1962 மும்பை, மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியர் |
பணி | குடிசார் உரிமைகள் செயல்பாட்டாளரும், ஊடகவியலாளரும் |
தீசுதா செதால்வத் (Teesta Setalvad ;1962)[1] மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் இந்தியப் பெண்மணி ஆவார். மத வாதத்துக்கு எதிராகப் போராடும் இதழியலாளர். பெண்களுக்காகவும் தலித் இன மக்களுக்காகவும் இசுலாமிய இன மக்களுக்காகவும் பாடுபட்டு வருபவர். இவர் ஒரு இந்திய ஊடகவியலாளர் மற்றும் கல்விமான் ஆக அடையாளம் காணப்படுகின்றார்.[2][3][4]
தீசுத, குஜராத்தி இனத்தவர், மும்பையைச் சேர்ந்த சட்டத்தரணியான அதுல் செதால்வத் மற்றும் கிராமப்புற கைப்பணி விளக்கவுரையாளர் சீதா செதால்வத் ஆகியோரின் மகளாவார்[5]. இவருடைய பாட்டனார் மோ. சி. செதால்வத் இந்தியச் சட்டத்துறையின் முதல் தலைவராவார்.[2][4] இவருடைய கணவர் ஜேவித் ஆனந்த் ஒரு இதழாளரும்; மனித உரிமை செயல்பாட்டாளரும் ஆவார்.[6]. இவருக்கும் இவரது கணவர் ஜேவித்துக்கும் தாமரா மற்றும் ஜிப்ரான் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[7]
இவர் 1983 இல் மும்பைய் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பாடத்தில் பட்டம்பெற்று, ஊடகவியலாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.[8] இவர் தி டெய்லி மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களின் மும்பைப் பதிப்புகளிற்கும் பின்னர், பிசினஸ் இந்தியா பத்திரிக்கைக்காகவும் செய்திகள் சேகரித்தார். பம்பாய் கலவரங்கள் நடந்தபோது இனவாத வன்முறைகளால் அதிர்ச்சிக்குள்ளான இவர், கொள்கைவாதியான தனது கணவர் ஜேவித் ஆனந்துடன் சேர்ந்து 1993 இல் முழு நேர ஊடகத்துறையை விட்டுவிலகி, மாதாந்திர இதழான கம்யூனலிஸம் கம்பட் டைத் தொடங்கினார்.[9]
2007 இல், "மகாராட்டிராவில் பொதுப் பணிகள்" செய்ததற்காக இந்திய அரசாங்கம் இவருக்கு பத்ம சிறீ விருது வழங்கியது.[10]
2002 ஆம் ஆண்டில் குசராத்தில் நிகழ்ந்த இனக் கலவரத்தில் மாண்டோருக்காகவும் பாதிக்கப்பட்டோருக்காகவும் நியாயமும் நீதியும் கோரி ஓர் அமைப்பை உருவாக்கினார். நீதிக்கும் அமைதிக்குமான குடிமக்கள் என்பது அதன் பெயர்.[11] குசராத்து மதக் கலவரம் குறித்து நடந்த பன்னாட்டு மத உரிமைகளுக்கான அமெரிக்கக் கமிசன் உசாவலில் சாட்சியம் அளித்தார்.[12][13][14][15][16] இந்தியப் பள்ளிக்கூடங்களில் வரலாறு சமூக பாடத் திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவும் அவற்றைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கோஜ் (KHOJ) என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மக்கள் உரிமைகள் அமைப்பின் (PUHR) பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
நவம்பர் 2004 இல், இதுவரை எப்போதும் இல்லாதவாறு குசராத்துக்கு வெளியே வழக்கை இடமாற்றுவதற்கு வழிவகுக்குமாறு, குறிப்பிட்ட சில கூற்றுக்கைளைக் கூறுமாறு பெஸ்ட் பேக்கரி வழக்கில் மிக முக்கியமான சாட்சியான சகீரா ஷீக்குக்கு இவர் அழுத்தம் கொடுத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். ஆகஸ்ட் 2005 இல், இவருக்கு எதிராக சகீரா கொடுத்த தூண்டுதல் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய உச்ச நீதிமன்ற சபை மன்னிப்புக் கொடுத்தது.
சப்ராங் தகவல் தொடர்பு உறுப்பினர்கள் அமெரிக்கா வந்து, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சமய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை என்றும், பஜக ஆட்சிக்கு கீழுள்ள இந்திய மாநிலத்தில் சிறுபான்மையினரின் (கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்) சமய சுதந்திரங்கள் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
குஜராத் வழக்கை புலன் விசாரணை செய்து துரிதப்படுத்துவதற்காக இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), குஜராத் கலவர வழக்கின் சம்பவங்களைச் சுவாரசியம் ஆக்குவதற்காக டீஸ்டா செடல்வாட் சில பொய்யான வன்முறை வழக்குகளை உருவாக்கியுள்ளார் என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஏப்ரல் 2009 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. கற்பனையில் உருவாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி சான்றுகளை வழங்குவதற்காக பொய்யான சாட்சிகளுக்கு டீஸ்டா செடல்வாட்டும் அரசு சாரா நிறுவனங்களும் பயிற்சி அளித்தன என்று முன்னாள் CBI தலைவர் ஆர் கே ராகவன் தலைமையிலான SIT கூறியுள்ளது.[23] “இரக்கமற்ற கொலைக் கதைகளைக் கட்டுகின்றவர்" என்று SIT குற்றஞ்சாட்டியது.[24]
SIT ஆல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, வெவ்வேறு நீதிமன்றங்களின் முன்னிலையில் கலவரம் குறித்த சம்பவங்களைப்பற்றி ஒரேமாதிரியான வாக்குமூலங்களையே வழங்கிய 22 சாட்சிகளும் உண்மையில் சம்பவத்தைப் பார்த்த சாட்சியங்கள் இல்லையென்றும், அவர்களுக்கு பயிற்சி கொடுத்த செடல்வாட்டால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களையே அவர்கள் ஒப்புவித்துள்ளார்கள் என்றும், நீதிமன்றத்துக்குக் கூறப்பட்டது.[24]
நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி சதாசிவம் மற்றும் அப்தாப் அலாம் ஆகியோரடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அறிக்கையில், கர்ப்பிணியான முஸ்லீம் பெண் கௌசர் பானு முரட்டுக்குழுவால் கற்பழிக்கப்பட்டு அவரது கருவானது கூரிய ஆயுதங்களால் வயிற்றைக் கிழித்து அகற்றப்பட்டது என்று அதிகளவில் பேசப்பட்ட வழக்கும் சித்தரிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிடப்பட்டது.[23][25]. ஆனாலும் இறந்த முஸ்லீம் பெண்ணின் கணவர், தனது மனைவியின் கருப்பை கொலையாளியினால் அகற்றப்பட்டைருந்தும்கூட, மருத்துவர்கள் தமது பிணப்பகுப்பாய்வில் அதனைத் தவறாகவே குறிப்பிட்டுள்ளனர் என்று கூறினார்[26]. ஆனால் இதனை ஆராய்ந்த நீதிமன்றம், அந்தப் பெண்ணும் அவரது வயிற்றிலிருந்த கருவும் கொல்லப்பட்டது உண்மையென்றும், ஆனால் கொலையாளி கருவை வயிற்றிலிருந்து அகற்றினார் என்பதற்குத் தகுந்த ஆதாரமில்லையென்றும் கூறியது[27].
ஒரு நாளின் பின்னர், விசாரணையிலுள்ள அறிக்கையானது SIT அறிக்கை அல்ல, அது குஜராத் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிக்கை எனக் கூறுகின்ற, நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (CJP) அமைப்பிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டது.[28]. டைம்ஸ் இல் முதலில் வெளிவந்த கட்டுரையின் ஆசிரியர் "CJP குறிப்பிட்டது போல எனது அறிக்கை குஜராத் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது அல்ல, அது SIT அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது" என்று பதிலளித்தார். TOI க்கு அந்த அறிக்கைக்கான அணுக்கம் இருப்பதால், ஊடகத்தின் வேறு எந்தப் பிரிவிடமும் அந்த அறிக்கை உள்ளதா அல்லது இல்லையா என்ற விடயம் தொடர்பற்றது எனக் கூறப்பட்டது.[29]
டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கூறிய ஆரம்பச் செய்தியில் இருந்த ஓட்டைகளை திலிப் டி'சௌஸா கண்டுபிடித்துவிட்டார். நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அனுப்பிய செய்திக்கு மறுப்புரை விடுத்த டி'சௌஸா, "உண்மையில்லாதது" என SIT கண்டுபிடித்துவிட்டதாக செய்தியாளர் உண்மையில் கோரிய மூன்று "பரவலாக அறியப்பட்ட" சம்பவங்களை அவர் படிக்கக்கூட இல்லை என குறிப்பிடுகிறார்.[30]
இந்துஸ்தான் டைம்ஸி ல் வந்த ஒரு செய்தி TOI அறிக்கை பற்றி கேள்வி எழுப்பியது. SIT இன் தலைவர் ஆர்.கே. ராகவன் அறிக்கை வெளியில் வந்தது குறித்து இவ்வாறு குற்றங்கூறினார், "குறிப்பிட்ட அறிக்கை வெளிக்கசிந்துள்ளமை நம்பகமற்ற உள்நோக்கங்களால் தூண்டப்படுகின்றதாகத் தெரிகிறது. இதுபோன்ற உரிமைகோரல்களை என்னால் உறுதிப்படுத்த முடியாது. இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார். அறிக்கைகளை[31] மறுக்கவோ உறுதிப்படுத்தவோ அவர் மறுத்தார். SIT அறிக்கை வெளிக்கசிந்தமை 'நம்பிக்கைத் துரோகமானது' என உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.[32]
டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்றால் நீதிக்கு திருத்தவே முடியாத கேட்டை அவர் விளைவித்துவிட்டார் என்று புதுடில்லி கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், தேசிய அறிவுசார் ஆணையம் முன்னாள் உறுப்பினருமான, பிரதாப் பானு மேத்தா டீஸ்டா செடல்வாட்டைக் குறைகூறினார். கலவர வழக்கு[33] விசாரணைகளில் பொது சமூகமானது பாரபட்சமற்ற உத்தரவாதம் எதையேனும் கொண்டிருக்கக்கூடிய தகுதி குழிதோண்டிப் புதைக்கப்படும் என விவரித்தது போல, அவர் டீஸ்டா செடல்வாட்டின் செயற்பாடுகளைக் கவனித்தார். இந்திய குடியரசின் நம்பிக்கைகளின் அத்திவாரத்தையே அவரின் செயல்பாடு குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக மற்றவர்கள் கூறியுள்ளனர்[34]
2002 குஜராத் கலவர வழக்கை விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இச்சிறப்பு புலனாய்வு குழு, தமது விசாரணையின் முடிவில் குஜராத் கலவர வழக்கில் அபோதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர் என்ற முடிவிற்கு வந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவை எதிர்த்து, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவை 24 சூன் 2022 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியதுடன், சிறப்பு விசாரணைக் குழுவின் தகுதியை கேள்விக்குட்படுத்த எந்த காரணமும் இல்லை என்றும் கூறியது.[35][36][37]
மேலும் இவ்வழக்கின் மற்றொரு மனுதாரரும், ஆர்வலருமான தீஸ்தா செதல்வாட்டின் குற்றச்சாட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஆரம்பத்தில் வழக்கு தொடர்ந்த சமூக செயல்பாட்டாளரும் சிட்டிசன்ஸ் ஃபார் பீஸ் அண்ட் ஜஸ்டிஸ் என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான தீஸ்தா செதல்வாட் மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் இந்த வழக்கில் நரேந்திர மோதிக்கு எதிராக உண்மைக்கு புறம்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாக குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் தனிப்படையினர் 26 சூன் 2022 அன்று கைது செய்தனர்.[38][39]
குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் 1 சூலை 2023 அன்று தள்ளுபடி செய்தது. மும்பையில் வசிக்கும் தீஸ்தா சீதல்வாட் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சரணடைவார் என்று தெரிகிறது. இல்லையெனில் அவர் கைது செய்யப்படுவார்.[40]
குஜராத் கலவர வழக்கில், டீஸ்டா செதல்வாட்டை குஜராத் உயர் நீதி மன்றம் சரணடைய உத்தரவிட்ட நிலையி்ல், 19 சூலை 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.[41]
2007 பத்ம ஸ்ரீ தவிர, டீஸ்டா செடல்வாட் பின்வரும் விருதுகளைப் பெற்றார்:
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: External link in |publisher=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)ட்