துக்கிராலா | |
---|---|
கிராமம் | |
![]() துக்கிராலாவில் கொம்மமுரு கால்வாய் | |
ஆள்கூறுகள்: 16°19′38″N 80°37′41″E / 16.3271°N 80.6280°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
வட்டம் | Duggirala |
அரசு | |
• வகை | ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | துக்கிராலா கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 805 ha (1,989 acres) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 11,098 |
• அடர்த்தி | 1,400/km2 (3,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522330 |
இடக் குறியீடு | +91–8644 |
வாகனப் பதிவு | ஏபி |
துக்கிராலா (Duggirala) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவில் துக்கிராலா மண்டலத்தின் மண்டலத் தலைமையகமும் ஆகும். [3] இது நாட்டின் முக்கிய மஞ்சள் வர்த்தக மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இக்கிராமத்திலுள்ள கேசவசாமி கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் பொது ஊழி 12ஆம் நூற்றாண்டில் சோழ வம்சம் அதன் இருப்பைக் கொண்டுள்ளது. [4]
துக்கிராலா 16.3271 வடகிலும் 80.6280 கிழக்கிலும் அமைந்துள்ளது. இது 805 ஹெக்டேர் (1,990 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது. சீதாநகரத்திலிருந்து ( தாடேபல்லி ) ஒரு கால்வாய் கிராமம் வழியாக செல்கிறது. இது கிருஷ்ணா ஆற்றிலிருந்து தண்ணீரை இழுத்து மேற்கு டெல்டா அமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது. இது கொம்மமுரு மற்றும் நிசாம்பட்டிணம் ஆகிய இடங்களின் கால்வாய்களுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. [5]
2011 இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, இந்த கிராமத்தில் 11,098 என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை இருக்கிறது. கிராமம் 3,128 வீடுகளைக் கொண்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 5,505 ஆண்கள், 5,593 பெண்கள் மற்றும் 1,053 குழந்தைகள் (0–6 வயதுடையவர்கள்) என இருக்கின்றனர். சராசரி கல்வியறிவு விகிதம் 7,759 கல்வியாளர்களுடன் 76.75% ஆக உள்ளது. மொத்தம் 4,860 தொழிலாளர்கள் மற்றும் 6,238 தொழிலாளர்கள் அல்லாதவர்கள் உள்ளனர். உழைக்கும் மக்கள் தொகை 3,932 பிரதான மற்றும் 928 குறு தொழிலாளர்கள்.
வேளாண்மை
கிராமத்தில் உள்ள துக்கிராலா வேளாண் கிடங்கு விவசாய பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது. [6] முக்கிய பயிர்களாக நெல், மஞ்சள் போன்றவை பயிரிடப்படுகிறது. [7] [8] துக்கிராலா மஞ்சள் கிடங்கு மாநிலத்தின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இது 30,000 க்கும் மேற்பட்ட பைகள் மஞ்சளைக் கையாளுகிறது. [9] இது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மஞ்சளில் 10% உற்பத்தி செய்கிறது. மேலும்,உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. [10]
தொழில்கள்
சி.சி.எல் தயாரிப்புகள் (இந்தியா) நிறுவனம் துக்கிராலாவில் ஒரு உடனடியாக கரையக்கூடிய காப்பி உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது. [11]
உள்ளூர் போக்குவரத்தில், தெனாலி பேருந்து நிலையத்திலிருந்து மங்களகிரி மற்றும் விசயவாடா வரை ஆந்திர மாநில போக்குவரத்துப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தெனாலி - மங்களகிரி சாலை துக்கிராலா வழியாக செல்கிறது. [12] கிராமப்புற சாலைகள் கிராமத்தை சிந்தலபுடி, இமானி, கே.ஆர்.கொண்டுரு, மஞ்சிகாலபுடி, மொராம்புடி, நம்பூரு, பெனுமுலி மற்றும் பெத்தபலேம் ஆகியவற்றுடன் இணைக்கின்றன. [13]