கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் டிசம்பர் 5,2011 அன்று தொடங்கி[5] 35 நாட்கள் நடைபெற்று முடிந்தது.[6] இப்படத்தின் இறுதி சண்டைக் காட்சி 60 சண்டைப்பயிற்சி வீரர்களுடன் 7 காமிராக்கள் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.[7]
தங்களின் கள்ள துப்பாக்கி என்ற படத்தின் தலைப்பு போல் இருப்பதால் துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த தடைவிதிக்குமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார்.[4][8]
இத்திரைப்படம் இசுலாமியர்களை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி சில இசுலாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.[9][10][11] அதனைத் தொடர்ந்து விஜய் அரசிடம் திரைப்படத்தைப் பாதுகாக்கக் கூறி மனு தாக்கல் செய்தார்.[12] அதன்பின்னர் சர்ச்சைக்குறிய காட்சிகளுக்காக மன்னிப்புக் கோரிய பிறகு அக்காட்சிகள், படத்தில் இருந்து நீக்கப்பட்டன.[13] இத்தவறுக்கு பரிகாரமாக விஜய் ஒரு படத்தில் இசுலாமியராக நடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அறிவித்துள்ளார்.[14]