அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு ஏதுவாக, ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயர் சூட்டியது. தேசிய ஓய்வூதியத் திட்டம் 01. 05. 2009-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.[1][2]
இந்தப் புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாதாமாதம் செலுத்தும் குறைந்தபட்ச தன்பங்களிப்பு தொகை ரூபாய் 1000/- அதிக பட்சம் ரூபாய் 12,000/- உடன் இந்திய அரசு தன் பங்கிற்கு ரூபாய் மாதாமாதம் ரூபாய் குறைந்தபட்சம் ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 12,000/- செலுத்தும். இத்திட்டம் தற்போதைக்கு வரும் 2016-2017 நிதியாண்டு வரை தொடரும். இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் இறக்கும் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம், ’நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’ (PRAN) வழங்கப்படும். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு, இரண்டடுக்கு தனிநபர் கணக்குகளைக் கொண்டுள்ளது:[2][3]
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரும் நிதியை நிர்வகிப்பதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்[4] ஒன்றை இந்திய அரசு அமைத்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்ட நிதிக் கணக்குகளைக் கையாள்வதற்கு, இந்திய அரசு மையக் கணக்கு வைப்பு முகமை (Central Record Keeping Agency) [5] எனும் நிறுவனத்தைத் துவக்கியுள்ளது.