![]() தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் | |
சுருக்கம் | NIOS |
---|---|
உருவாக்கம் | 3 நவம்பர் 1989 |
வகை | அரசு பள்ளிக் கல்வி வாரியம் |
தலைமையகம் | நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா |
தலைமையகம் |
|
ஆட்சி மொழி | இந்தி & ஆங்கிலம் |
தலைவர் | ஜே, ஆலம் |
தாய் அமைப்பு | மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா) |
வலைத்தளம் | www |
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) (राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान), முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும். 1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது. [1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.
இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக பின்வரும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் காரணமாகத் திகழ்கிறது. 2004-2009 ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகளுக்கு சுமார் 1.5 மில்லியன் மாணவர் சேர்க்கை ஒட்டுமொத்தமாக இருந்தது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350000 மாணவர் சேர்க்கையும் இருக்கிறது.[2]
NIOS பாடத்திட்டம் காமன்வெல்த் கல்வி (COS) மற்றும் யுனெஸ்கோவோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.[3]
இது ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத், நேபாளம், கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் இந்திய நாட்டவர்களுக்காக அந்த நாடுகளில் கல்வி மையங்களை வைத்திருக்கிறது.[4]
தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் திறந்தநிலை அடிப்படைக் கல்வி திட்டத்தில் மூன்று பின்வரும் படிப்புகள் வழங்குகின்றன:
மண்டல அலுவலகங்கள் பின்வரும் நகரங்களில் உள்ளது.