துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 11 மார்ச்சு 1986 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | என் எச்-8, சர்வீஸ் சாலை, மகிபால்பூர், புது தில்லி - 110037 |
குறிக்கோள் | தகவல் தொழில்நுட்பங்களை இந்தியக் காவல்துறைக்கு அதிகாரமளித்தல் |
அமைப்பு தலைமை | |
மூல நிறுவனம் | இந்திய உள்துறை அமைச்சகம் |
முக்கிய ஆவணம் | |
வலைத்தளம் | ncrb.gov.in |
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பொறுப்புள்ள இந்திய அரசு நிறுவனம் ஆகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. இதன் தற்போதைய இயக்குநர் இகாப அதிகாரியான விவேக் கோகியா ஆவார். கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் சேகரித்த தகவல்களை தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
1986-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் முதன்மைப் பணி, இந்தியாவில் 7 ஆண்டு மற்றும் அதற்கும் மேல் தண்டனை பெற்ற குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக செயல்படுவதால், குற்றத்தை குற்றவாளிகளுடன் இணைப்பதில் புலனாய்வாளர்களுக்கு உதவுகிறது. ஒருங்கிணைப்பு மற்றும் காவல்துறை கணினி இயக்குநரகம், நடுவண் புலனாய்வுச் செயலகம்யின் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவியல் தரவுப் பிரிவு மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் மத்திய கைரேகைப் பணியகத்தை இணைப்பதன் மூலம் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 1986-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின்[2] முந்தைய புள்ளியியல் கிளையும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பிரிக்கப்பட்டது.[3]
சட்டத்தை நிலைநாட்டவும் மக்களைப் பாதுகாக்கவும் இந்திய காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் குற்றவியல் புலனாய்வு மூலம் அதிகாரம் அளித்தல். குறிப்பாக தீவிரமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு குற்ற பகுப்பாய்வில் தலைமைத்துவத்தையும் சிறப்பையும் வழங்குதல்.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வு செய்ய காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதை இந்த சட்ட முன்மொழிவு பிரிவு 2(1)(பி) கட்ட்டாயப்படுத்துகிறது. இவ்வாறு சேகரிப்பட்ட தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேமிக்கும். சிறைக் கைதிகளின் பயோமெட்ரிக் தரவுகளை 75 ஆண்டுகள் ஆவணப்படுத்தும் உரிமையை இந்த சட்ட முன்மொழிவு வழங்கியுள்ளது.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)