நபம் துகி Nabam Tuki | |
---|---|
அருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர் | |
பதவியில் 1 நவம்பர் 2011 – ஜனவரி 26, 2016 | |
முன்னையவர் | ஜார்பம் காம்லின் |
பின்னவர் | கலிகோ புல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஓம்புலி கிராமம், சகலி, பபும் பரே மாவட்டம், அருணாசலப் பிரதேசம் | 7 சூலை 1964
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
பிள்ளைகள் | 5 |
வாழிடம் | இட்டாநகர் |
தொழில் | அரசியல்வாதி |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை[1] |
இணையத்தளம் | www.nabamtuki.org |
நபம் துக்கி (பி. ஜூலை 7, 1964) அருணாசலப் பிரதேசத்தின் 8ஆம் முதலமைச்சர் ஆவார். நிஷி மக்களை சேர்ந்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 26, 2016 வரை பதவி வகித்தவர்.[2]
ஜனவரி 2016 இல் இவரது அமைச்சரவையில் பதவிவகித்த கலிகோ புல், காங்கிரஸ் கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இவருக்கு எதிரானார். இதனால் அருணாச்சலப் பிரதேச அரசியலில் சிக்கல் ஏற்பட்டது. இவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.[3][4]
அருணாசலப் பிரதேசம், பபும் பரே மாவட்டம், சகலி உட்கோட்டத்தைச் சேர்ந்த ஓம்புலி கிராமத்தில் ஜூலை 7, 1964 இல் நபம் துக்கி பிறந்தார். இவருக்கு ஐந்து மகள்களும் இரு மகன்களும் உண்டு.[5]
1995 இல் சகலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேகோங் அபாங்கின் அமைச்சரவையில் துணை வேளாண் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[5] 1998 இல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.[5] 1999 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகுத் மித்தி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2004, 2009 ஆண்டுகளில் நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேகோங் அபாங்க் மற்றும் தோர்ச்யீ காண்டு அமைச்சரவைகளில் அமைச்சராக பதவிவகித்தார்.[5] ஜார்பம் காம்லினுக்கு அடுத்தபடியாக, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 2016 வரை பதவியிலிருந்தார்..[2][3]