நிதி கோயல் (Nidhi Goyal பிறப்பு 21 செப்டம்பர் 1985) ஓர் இந்திய இயலாமை மற்றும் பாலின உரிமை ஆர்வலர் ஆவார், இவர் ஐ.நா. மகளிர் நிர்வாக இயக்குநரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1][2] கோயல், மும்பைரைசிங் ஃபிளேம் எனும் அரசு சார்பற்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார்.[3][4] இந்த அமைப்பு பாலியல், பாலினம், சுகாதார மற்றும் உரிமைகள் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள் ஆகியோர் தொடர்பான சேவைகளைச் செய்து வருகிறது.[5] இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகையும் ஆவார்.[5][6]
கோயல் மும்பையில் பிறந்து வளர்ந்தார்.[6] 15 வயதில், இவள் குணப்படுத்த முடியாத, மீளமுடியாத சீரழிவு கண் நோயால் இவளது குருடனாக்கப்பட்டாளிவரது கண்பார்வை பறிபோனது.[7][8] மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அடிப்படையிலான வேலைக்கு மாறுவதற்கு முன்பு இவர் மக்கள் ஊடகங்களில் ஒரு தொழிலைத் தொடங்கினார்.[9] இவரது கண்பார்வை பறிபோவதர்கு முன்னால் கோயல் ஒரு உருவப்படம் ஓவியர் ஆக வேண்டும் என்று விரும்பினார், 4. வயது முதல் இவர் ஓவியம் வரைந்தார்.[10] இவர் முதலில் கண் நோய் கண்டறியப்பட்டபோது, கோயல் தனது குடும்பத்தின் ஆதரவு தனக்கு முக்கியமானதாக இருந்ததாக கூறுகிறார்.[7][10] பார்வைக் குறைபாடுள்ள இவளுடைய மூத்த சகோதரர் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தியது இவருக்கு மற்றொரு ஆதரவாக இருந்தது.[10][11] இவளுடைய குடும்பத்தின் இந்த ஆதரவு, குறைபாடுகள் உள்ள மற்ற பெண்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு இவர் உந்தப்பட்டாள்.[10][12]
கோயல் மாந்தப் பாலுணர்வியல் ,பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் ,மாற்றுத் திறன் கொண்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாதிடுகிறார்.[3][12][13][14][15] கோயல் தனது செயல்பாட்டுப் பயணத்தில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.[16] கோயல் ஆரம்பத்தில் பாலுறவு தொடர்பாக வேலை செய்யத் தொடங்கியபோது, இந்த வேலையின் முக்கியத்துவத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்கியதோடு, "போலி-செயற்பாடு" மற்றும் "உயரடுக்கு செயற்பாடு" என்று அழைத்ததால், இவர் பின்னடைவையும் எதிர்கொண்டார்.[10]
குறைபாடுகள் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான வன்முறை வடிவங்களையும், விரிவான பாலியல் கல்வி, பாலியல் ஆரோக்கியம் அல்லது சட்ட உதவியை அணுகும் சவால்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோயல் செயல்படுகிறார்.[17] இவர் மாற்றுத் திறன் கொண்ட பெண்களின் பாலியல் மீறல்கள் பற்றியும் பேசியுள்ளார் [16][18]மி டூ இயக்கத்தின் போது மாற்றுத் திறன் பெண்களின் அமைதி பற்றியும் பேசினார்.[19]
மாமா கேசின் #என் உடல், என் விருப்பம் பிரச்சாரத்தில் கோயல் இடம்பெற்றார், அங்கு ஊனமுற்ற பெண்கள் எப்படி உதவியற்றவர்களாக அல்லது மீ நாயகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள், ஆனால் "சாதாரணமாக" பார்க்கப்படவில்லை என்பது குறித்து இவர் உரையாடினார்..[20]
சர்வதேச மனித உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கான "இன்விசிபிள் விக்டிம்சு ஆஃப் செக்சுவல் வயலன்சு:ஆசசு டூ ஜஸ்டிசு ஃபார் விமன் அண்ட் கேர்ள்சு வித் டிசபிளிய்யீசு இன் இண்டியா" எனும் தலைப்பிலான அறிக்கையினை இணைந்து எழுதினார். இதில் மாற்றுத் திறனாளிகள் பெண்கள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.[21][22][23] பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சட்ட உதவி மற்றும் நீதியை அணுகும்போது எதிர்கொள்ளும் சவால்களை இந்த அறிக்கை பார்க்கிறது.[21][24] 2013 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்முறையில் இந்தியா முக்கியமான சட்டச் சீர்திருத்தங்களைச் செய்தாலும், குறைபாடுகள் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இன்னும் சமமான நீதி கிடைக்கவில்லை என்றும் "பாலியல் வன்முறையில் கண்ணுக்குத் தெரியாத பாதிக்கப்பட்டவர்களாக இவர்கள் இருப்பதாகவும்" கோயல் கூறினார்.