நிருபமா ராத், இந்தியாவைச் சேர்ந்தமகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவராவார். இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். மேலும் பல்வேறு ஒரிய புத்தகங்கள், மருத்துவம் சம்பத்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறந்த சமூக ஆர்வலருமான இவர் இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். [1] [2] 1987 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.
பல்வேறு சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், உத்க்லா மகிளா சம்மிலானி மற்றும் உழைக்கும் பெண்கள் விடுதியின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [1]
மருத்துவப்பணிக்காக மட்டுமல்லாது இலக்கிய ஆர்வத்திற்காகவும், எழுத்து படைப்பிற்காகவும் அறியப்பட்ட இவரின் படைப்புகள் சில,
இத்தகைய ஒரிய இலக்கிய பங்களிப்பை மேலும் பாராட்டும் வகையில் 2003 ம் ஆண்டு ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான் விருதும் அவருக்கு வழக்கப்பட்டுள்ளது. . [2]
டாக்டர் நிருபமா ராத் 2011 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள அவரது தர்கா பஜார் இல்லத்தில் காலமானார். தனது எண்பத்தியாறு வயதில் காலமான அவருக்கு டாக்டர் ஜெயந்த் ராத் மற்றும் ரஜத் ராத் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர், முன்னாள் அட்வகேட் ஜெனரல் கங்காதர் ராத், 2008ம் ஆண்டு இறந்தார். [3]