நிலிமா இப்ராஹிம் ( வங்காள மொழி:নীলিমা ইব্রাহীম) (11 அக்டோபர் 1921 – 18 ஜூன் 2002) பங்களாதேச கல்வியாளார், இலக்கியவாதி மற்றும் சமூக சேவகரும் ஆவார்.பங்களா இலக்கிய பங்களிப்புகளின் மூலம் அவர் நன்கு அறியப்பட்டவர்.[1]
1971 ஆம் ஆண்டு பங்களாதேச விடுதலைப் போரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களை பற்றி தனது அமீ பிரங்கனா போல்ச்சி (Ami Birangana Bolchi) என்ற புத்தகத்தில் சித்தரித்ததின் மூலம் மேலும் நன்கு அறியப்பட்டார்.
பங்களாதேஷ் அரசாங்கத்தால் பங்களா இலக்கியத்திற்கான பங்களிப்புகளுக்காக 1969 ல் பங்களா அகாடமி இலக்கிய விருது பெற்றார். 1996 ல் பேகம் ரோக்கியா பதக் (Begum Rokeya Padak ) விருதும், 2000 ம் ஆண்டு எகுசே பதக் (একুশে পদক) விருதும் பெற்றார். [2] [3]