![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1956 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | Shri.ராகேஷ் குமார் (தலைவர் & எம்.டி.)[1] |
உற்பத்திகள் | லிக்னைட், மின்சாரம் |
வருமானம் | ▲ ₹8,672.84 கோடி (US$1.1 பில்லியன்)(2017)[2] |
நிகர வருமானம் | ▲ ₹2,368.81 கோடி (US$300 மில்லியன்)(2017) |
பணியாளர் | 12874 (30.09.2019)[3] |
இணையத்தளம் | nlcindia.com |
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், முபச: 513683 ) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனம் உருவாக காரனமாக இருந்தவர் ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார் ஆவர்.[4]
மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓர் உடன்பாட்டின் மூலம் ரூ 360 கோடி மதிப்புள்ள 3.56 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[5] நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.[6]