ஃபகர் சமான் (Fakhar Zaman (Urdu: فخر زمان, பஷ்தூ: فخر زمان; பிறப்பு: ஏப்ரல் 10, 1990) பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் முன்னாள் பாக்கிஸ்தானிய கப்பற்படை அதிகாரி ஆவார்[1] .இவர் பாக்கிஸ்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் அபோதாபாத் ஃபால்கன்ஸ், ஹபிப் வங்கி லிமிடட், கராச்சி புளூஸ், கராச்சி டால்பின்ஸ், கராச்சி செப்ராஸ், கைபர் பக்துன்வா, லாகூர் கலாந்தர்ஸ், மற்றும் பெஷாவர் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[2] சூலை 2018 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சார்பாக ஒருநாள் போட்டியில் இரண்டு நூறுகள் அடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்[3]. சூலை 22 இல் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1,000 ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[4] ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[5][6]
ஜமான் 1990 ஏப்ரல் 10 அன்று கைபர் பக்துன்க்வாவின் மர்தான் மாவட்டத்தில் கட்லாங்கில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பினைத் தொடர்ந்து தனது 16 ஆவது வயதில் கராச்சிக்குச் சென்றார். 2007 ஆம் ஆண்டில், பகதூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படை பள்ளியில் இருந்து கற்றல் மற்றும் பயிற்சியினைப் பெற்ற பின்னர் ஜமான் பாகிஸ்தான் கடற்படையில் ஒரு மாலுமியாக சேர்ந்தார் .[7][8][9] கடற்படைத் துறையினைத் தேர்வு செய்யுமாறு அவரது தந்தையால் வற்புறுத்தப்பட்டார். , ஃபக்கரின் சிறுவயது முதலே துடுப்பாட்டப் போட்டிகளுக்கு அடிமையாகிவிட்டதால், அவரது மகன் தனது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.[10] ஃபக்கர் என்ற பெயர் "பெருமை" என்று பொருள்படும்.[10] அவரது அணியினரிடையே, அவர் ஃப ஜி (சிப்பாய்) என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார்).[9][11][12]
கராச்சியில், பாகிஸ்தான் கடற்படை துடுப்பாட்ட அணியின் பிரதிநிதித்துவங்கள் உட்பட, துறைக்கு இடையேயான போட்டிகளில் ஜமான் அவ்வப்போது துடுப்பாட்டம் விளையாடுவதைத் தொடர்ந்தார். இவரின் திறமையினை முதலில் இவரின் கடற்படை பயிற்சியாளர் அசாம் கான் அடையாளம் கண்டார், அவர் தொழில்முறை கிரிக்கெட்டைத் தொடர ஊக்குவித்தார். 2013 ஆம் ஆண்டில், இந்த கனவைப் பின்தொடர்வதில் ஒரு கடினமான முடிவுக்கு பின்னர் அவர் தனது கடற்படை வாழ்க்கையை விட்டு வெளியேறினார், மேலும் கைபர் பக்துன்க்வா, அபோட்டாபாத் பால்கான்ஸ், பலூசிஸ்தான் மற்றும் பல கராச்சி அணிகள் போன்ற பிராந்திய அமைப்புகளுக்காக விளையாடத் தொடங்கினார். அவர் 2016 பாகிஸ்தான் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக ஆனார், மேலும் 2016–17 காயிட்-இ-அசாம் டிராபியின் தேர்வாளர்களையும் கவரனத்தினையும் பெற்றார். அவர் 2017 பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்கு லாகூர் கலந்தர்ஸ் அணியினரால் தேர்வுச் செய்யப்பட்டார், அங்கு அவருக்கு நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஆலோசனை வழங்கினார்.[13] பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் லாகூரில் ஒரு பயிற்சி முகாமின் போது அவரை கவனித்தார், அதைத் தொடர்ந்து அவர் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[14]
ஆகஸ்ட் 2017 இல், டி 20 குளோபல் லீக்கின் முதல் சீசனுக்கான டர்பன் கலந்தர்ஸ் அணியில் இடம்பெற்றார்.[15] இருப்பினும், அக்டோபர் 2017 இல், போட்டியானது தென்னாப்பிரிக்க அணி நிர்வாகத்தினால் நவம்பர் 2018 வரை ஒத்தி வைக்கப்பட்டது பின் அது ரத்து செய்யப்பட்டது.[16] ஜூலை 2019 இல், யூரோ டி 20 ஸ்லாம் துடுப்பாட்டபோட்டியின் தொடக்க பதிப்பில் ரோட்டர்டாம் ரைனோஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[17][18] இருப்பினும், அடுத்த மாதம் போட்டி ரத்து செய்யப்பட்டது.[19]
2017 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தது.[20] அந்தத் தொடருக்கான பாக்கித்தான் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. மார்ச் , 2017 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார்.[21]
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2017 வாகையாளர் கோப்பைக்கான தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. சூன் 7, 2017 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 31 ஓட்டங்கள் அடித்தார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்களாக இருந்த போது குச்சக் காப்பாளரிடம் கேட்சானது. ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது[22]. அதனைப் பயன்படுத்தி அந்தப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் வாகையாளர் கோப்பை இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[23] அணியின் மொத்த ஓட்டங்கள் 338 ஆக உதவி செய்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் முறையாக வாகையாளர் கோப்பையினைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ஃபகர் சமான் பெற்றார்.[24] இவரும் அசார் அலியும் முதல் இலக்கிற்கு 128 ஓட்டங்கள் எடுத்தனர். இதன்மூலம் வாகையாளர் கோப்பைக்கான போட்டித் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த பாக்கித்தானிய இணை எனும் சாதனையையும் 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக ஓட்டங்கள் அடித்த இணை ஆகிய சாதனைகளைப் படைத்தனர்.[25][26]
சூலை 8, 2018 இல் அராரேவில் நடைபெற்ற மூன்று நாடுகளுக்கு இடையேயான தொடரின் இறுதிப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 91 ஓட்டங்கள் அடித்து அணியினை கோப்பை வெல்வதற்கு உதவினார்.[27][28] இந்தத் தொடரில் ஒரே ஆண்டில் பன்னாட்டு இருபது 20 போட்டியில் 500 க்கும் அதிகமான ஓட்டங்கள் அடித்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[29]
ஏப்ரல் 2019 இல், அவர் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[30][31] கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜமான் 138 ரன்கள் எடுத்தார். இது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் வீரர் எடுக்கும் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் ஆகும்.[32] இருப்பினும், மூன்று நாட்களுக்குப் பிறகு, தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இமாம் உல் ஹக் 151 ஓட்டங்கள் எடுத்து அந்தச் சாதனையினை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.[33]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: பகர் சமான் (துடுப்பாட்டக்காரர்)