பகவதி சரண் வர்மா என்பவர் இந்தி மொழிக் கவிஞர் ஆவார். இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சித்ரலேகா என்ற புதினம் குறிப்பிடத்தக்கது. இதைத் தழுவி, 1941, 1964-ஆம் ஆண்டுகளில் இரண்டு இந்தித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியடைந்தன.[1][2]
1961-ஆம் ஆண்டில் இந்தி மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். இது பூலே பிஸ்ரே சித்ரா என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.[3] 1971-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4]
1978-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5]